ஆனந்த் அம்பானி திருமணம்! வண்ண வண்ண சூப்பரான ரிட்டர்ன் கிஃப்ட்கள் தயார்! பாருங்க
மும்பை: ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு பார்வையற்ற கலைஞர்கள் உருவாக்கும் மெழுகுவர்த்தி பரிசாக அளிக்கப்படும் நிலையில் அது எப்படி இருக்கும்? யாருடையது தயாரிப்பு தெரியுமா?
ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ உள்ளிட்ட ஏராளமான தொழில்களை செய்து வருபவர் முகேஷ் அம்பானி. இவருடைய தந்தை திருபாய் அம்பானி போட்ட விதையை இன்று ஆலமரமாக்கியுள்ளார் முகேஷ். இவர் தற்போது உலக பணக்காரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய இருமகன்களும் இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானிக்கு வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
எப்போதும் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியே பேசும் பொருளாக இருந்து வந்த நிலையில் ஆனந்த் அம்பானிதான் கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தார். இதற்கு காரணம் அவருடைய உடல் எடைதான், சுமார் 208 கிலோ எடை இருந்த அவர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து 108 கிலோவாக கொண்டு வந்தார். அதுவும் 18 மாதங்களில் இத்தகைய அரிய மாற்றத்தை நிகழ்த்தி காட்டினார்.

இவருடைய கடும் உழைப்பை நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இவர் ராதிகா மெர்சன்ட்டுடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். ராதிகா என்கோர் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைத் தலைவரான வீரேன் மெர்ச்சன்ட்- ஷைலன் மெர்ச்சன்ட்டின் மகளாவார். இதையடுத்து இரு வீட்டாரும் பேசி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.
இதற்காக மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் திருமணமும் அதை சார்ந்த சடங்குகளும் நடத்தப்படுகின்றன. இந்த திருமணம் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான குஜராத்தில் ஜாம் நகரில் உள்ள மாந்தோப்பில் நடைபெறுகிறது. இதன் அருகே புலிகள் சரணாலயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திருமண ஏற்பாடுகளை மணீஷ் மல்ஹோத்ரா கவனித்து கொள்கிறார் என்கிறார்கள்.

திருமணத்திற்கு தில்ஜித் தோசான்ஜ் மற்றும் ரிஹான்னாவின் நடன கச்சேரி இருப்பதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் திருமணத்திற்கு வருவோருக்கு என்ன கிப்ட் தரலாம் என யோசித்த நிலையில் மெழுகுவர்த்தியை பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெழுகுவர்த்திகளை மகாபலேஸ்வரில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கிறார்கள்.
இந்தியாவின் பாரம்பரிய கலைகளையும் கைவினை கலைஞர்களையும் சிறப்பிக்கும் விதமாக இது அமைந்துள்ளது. இதற்கான முயற்சிகளை ஈஷா அம்பானியின் ஸ்வதேஷ் எனும் குழுமம் செய்து வருகிறது. இந்த குழுமம் பாரம்பரிய கலைகளுக்கான அமைப்பாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்வதேஷ் பல திறமையான கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
இவர்களுடைய நிச்சயதார்த்தம் பாரம்பரிய குஜராத்தி முறையில் நடைபெறுகிறது. ராதிகா மெர்சன்ட் குஜராத்தி என்பதால் அந்த முறைப்படி கோலாகலமாக நடந்தது.












Click it and Unblock the Notifications