20 ஆண்டு மர்மம்.. என் வாயை திறந்தால் “பூகம்பம்” வெடிக்கும்! உத்தவை மிரட்டும் ஏக்நாத் ஷிண்டே
மும்பை: தான் மட்டும் நேர்காணல்களில் பேசத் தொடங்கினால் பெரும் பூகம்பம் வெடிக்கும் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவு பதவியேற்ற சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில மாலேகானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுக விமர்சனங்களை முன்வைத்தார்.

பூகம்பம் வெடிக்கும்
அவராற்றிய உரையில், "சில நபர்களைபோல் நான் விடுமுறை நாட்களில் எப்போதும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்பவன் கிடையாது. சிவசேனா கட்சி மற்றும் அதன் வளர்ச்சி குறித்தே நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும் பேட்டிகளை அளித்து பேசத் தொடங்கினால் பூகம்பமே வெடிக்கும்.

அடுத்த தேர்தல்
சிவசேனா கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுவிட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தது துரோகம் இல்லையா? என் தலைமையிலான சிவசேனா கட்சி பாஜகவுடன் இணைந்து அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 288 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெல்வோம்." என்றார்.

நானே சாட்சி
கடந்த 2002 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் திகேவை சுட்டிக்காட்டிய ஷிண்டே, "திகேவுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். நான்தான் அதற்கு சாட்சி." என்று கூறினார். கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் குஜராத், அசாம் மாநிலங்களில் உள்ள விடுதிகளில் தங்கி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

மகாராஷ்டிரா ஆட்சி கவிழ்ப்பு
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பாகவே உத்தவ் தாக்கரே பதவி விலகுவதாக அறிவித்தார். முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். இந்த நிலையில் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications