இது மோடி அலை அல்ல, ஹிந்துத்வா அலை... சுப்ரமணியம் சுவாமி கருத்து
மும்பை: லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றதற்கான காரணம் குறித்து ராஜ்யசபா எம்பியான சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலிலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜக 295 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணி கட்சிகள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளன.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. வெற்றியை நோக்கி பாஜக செல்லும் நிலையில், அதற்கான காரணம் குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்பியுமான சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஹஃப்போஸ்ட் என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர்," இந்த தேர்தலில் சாதியைவிட மதத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிகிறது. இளம் தலைமுறை வாக்காளர்களின் எண்ணம் மிக முக்கியம். இளம் தேசியவாதிகள் சாதியை பற்றி கவலை கொள்வதில்லை.
இந்த வெற்றிக்கு காரணம் மோடி அலை இல்லை. இது ஹிந்துத்வா அலை. மோடி அரசின் மோசமான பொருளாதார வளர்ச்சியை இந்தியர்கள் மன்னித்துள்ளனர். அதற்கு பதிலாக 5 ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சிக்காக வாக்களித்துள்ளனர்.
மேலும், வங்கதேசத்திலிருந்து ஊடுருபவர்களை கண்டறிவதற்கு மோடி அரசு எடுத்த முயற்சிகளையும் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் என்று கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஹஃப்போஸ்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பொருளாதார திட்டங்களில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது. ஆனால், ஹிந்துத்வாவை வைத்து மோடி வெற்றி பெறுவார் என்று சுப்ரமணியம் சுவாமி கூறி இருந்தது நினைவுகூறத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications