மும்பையில் ரசாயன தொழிற்சாலையில் தீவிபத்து.. காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்பு
மும்பை: மும்பையில் காட்கோபாரில் ரசாயன தொழிற்சாலையில் நடந்த தீவிபத்தின்போது காணாமல் போன இருவரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர்.
மும்பையின் காட்கோபாரில் சாகிநாகாவில் உள்ளது ரசாயன தொழிற்சாலை. இங்கு நேற்று இரவு பயங்கர தீவிபத்து நடைபெற்றது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சுமார் 15 வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இந்த நிலையில் தீவிபத்தின்போது 3 தொழிலாளர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.
Maharashtra: Fire fighting operation underway at the factory in Ghatkopar, Mumbai; 15 fire tenders at the spot. pic.twitter.com/oUOmJTsq96
— ANI (@ANI) December 27, 2019
இந்த நிலையில் தீயணைப்பு வீரர்களின் தேடுதல் வேட்டையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. காணாமல் போன மற்றொருவரை தேடும் பணிகள் நடைபெறுகிறது.
2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.. ஒரே பனி மூட்டமா இருக்கு.. வரலாறு காணாத உறைபனியால் உறையும் டெல்லி
இந்த தீவிபத்து எதனால் ஏற்பட்டது என தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.