ரபேல் விமானத்தில் அபிநந்தன் பறந்திருந்தால்.. விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.. முன்னாள் தலைவர்
மும்பை: ரபேல் விமானத்தில் அபிநந்தன் வர்த்தமான் பறந்திருந்தால் விளைவுகள் வேறுமாதிரி இருந்திருக்கும் என முன்னாள் விமான படை தலைவர் தனோவா தெரிவித்துள்ளார்.
மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி தனோவா கலந்து கொண்டார். அவர் பேசுகையில் ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும்.

மற்ற கோப்புகளும் மெதுவாகவே நகரத் தொடங்குகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 625 டன்கள் அடங்கிய புதிய நோட்டுக்களை 33 விமானங்களில் கொண்டு வந்து உங்களுக்கு விநியோகம் செய்தோம்.

20 கிலோ பையில் ஒரு கோடி இருந்தது எனில், நாங்கள் கொண்டு வந்த 625 டன் கரென்சிகளில் எத்தனை கோடிகள் இருந்திருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
கடந்த ஆண்டு பாலக்கோட்டில் நடந்த வான்வழி தாக்குதலின் போது மிக் ரக விமானத்திற்கு பதிலாக ரபேல் விமானத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் சென்றிருந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் போர் விமானங்களின் விலை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப அவர்களுக்கு உரிமை உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications