Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஸ்வரூபம் எடுக்கும் அதானி ஹெல்த்கேர்.. கவுதம் அதானி வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. வரப்போகும் வசதிகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் மருத்துவ மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று கவுதம் அதானி உரை ஒன்றில் குறிப்பிட்டார். மருத்துவ சுகாதாரத்தை மேம்படுத்துவது தேசிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் தனது உரையில், எரிசக்தி மற்றும் தளவாடங்களுக்காக சுமார் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக உறுதியளித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு சுகாதாரம் மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். மேலும், தனது நிறுவனம் எரிசக்தி மற்றும் தளவாடங்களில் சுமார் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என்றும் அவர் அறிவித்தார்

மும்பையில் ஜூலை 11 அன்று நடைபெற்ற SMISS ஆசியா பசிபிக் மாநாட்டில் இந்த உரை நிகழ்த்தப்பட்டது. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, மருத்துவர்களையும் தொழிலதிபர்களையும் ஒப்பிட்டார். முதுகெலும்பு உடலைத் தாங்குவது போல, இந்தியாவின் வளர்ச்சிக்கு சுகாதாரம் முதுகெலும்பாக உள்ளது என்று அவர் கூறினார்.

தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் பல சிறப்பு மருத்துவர்கள் மத்தியில் உரையாற்றிய அதானி, நன்றியுடன் தனது உரையைத் தொடங்கினார். "உங்களை முதுகுத் தண்டு என்று மக்கள் அழைக்கலாம்,.. ஏனென்றால் நீங்கள் நாட்டிற்கு முதுகுத்தண்டாக இருக்கிறீர்கள்" என்று அவர் கூறினார். மேலும், MBBS தனக்கு பிடித்த பாடங்களில் ஒன்று என்றும் அவர் கூறினார். குணப்படுத்துவது என்பது அறுவை சிகிச்சை மட்டுமல்ல .. குணப்படுத்துவது என்றால் நம்பிக்கை கொடுப்பது மற்றும் மனிதநேயத்தைக் காட்டுவதாகும் என்றார்.

பின்னர் அதானி தனது சொந்தக் கதையைப் பகிர்ந்து கொண்டார். தான் 16 வயதில் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டில் வந்ததாகவும், அங்கு வைரங்களை மெருகூட்டும் வேலையைச் செய்து ₹10,000க்கு முதல் வியாபார ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் கூறினார். 19 வயதில், அவர் தனது சகோதரரின் தொழிற்சாலையை நிர்வகித்தார். வியாபாரம் பெரிய கனவுகளுடன் தொடங்குவதில்லை. அது தைரியத்துடன் தொடங்குகிறது - எதிர்காலம் என்னவென்று தெரியாதபோதும் செயல்படுவதற்கான தைரியம் இருக்க வேண்டும்.. அதுதான் பிஸ்னஸ் என்று அவர் கூறினார்.

மன்மோகன் சிங் திட்டங்கள்

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களால் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு தனது வணிகப் பயணம் மாறியது என்று அவர் கூறினார். மூன்று வார்த்தைகள் எல்லாவற்றையும் மாற்றியது. இந்த சீர்திருத்தங்கள் பல பெரிய நிறுவனங்கள் தோல்வியடையக் காரணமாயின, ஆனால் என்னை போன்ற புதிய தொழில்முனைவோருக்கு புதியதாக தொழில் தொடங்க ஒரு வாய்ப்பை வழங்கியது.

ஆளில்லாத உப்பு நிலமான முந்த்ராவை இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிக் கதைகளில் ஒன்றாக மாற்றியதை அதானி விவரித்தார். இன்று, முந்த்ராவில் இந்தியாவின் மிகப்பெரிய பல சரக்கு துறைமுகம், உலகின் மிகப்பெரிய தனியார் அனல் மின் நிலையம் மற்றும் முக்கியமான சூரிய, பெட்ரோ கெமிக்கல் மற்றும் தளவாட செயல்பாடுகள் உள்ளன.

எனது குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் சுமார் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். நாங்கள் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளுக்கு ஆதாரமாக இருக்கும் முதுகெலும்பை உருவாக்குகிறோம். இந்தியாவின் எழுச்சி உறுதியானது என்பதை உலகுக்கு நிரூபிக்கும் ஒரு முதுகெலும்பு இது" என்றார்.

இன்று, அதானி குழுமம் பல பெரிய தொழில்களில் ஒரு பகுதியாக உள்ளது:

30 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவுடன் உலகின் இரண்டாவது பெரிய சூரிய சக்தி நிறுவனம்,

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய வலையமைப்பு,

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்கள் மற்றும் தளவாட செயல்பாடுகள்,

உலகின் மிகவும் மாறுபட்ட எரிசக்தி நிறுவனங்களில் ஒன்று - எல்என்ஜி, ஹைட்ரஜன், சிஎன்ஜி, ஈவி சார்ஜிங், சிமென்ட், பாதுகாப்பு மற்றும் பலவற்றில் செயல்படுகிறது.

முதுகுத் தண்டு பிரச்சனை - ஒரு தேசிய நெருக்கடி

தனது உரையில், வணிகத்திலிருந்து சுகாதாரத்திற்கு மாறிய அதானி, ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் நீரிழிவு மற்றும் இதய நோயை விட முதுகுவலி ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகிவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2 பெரியவர்களில் கிட்டத்தட்ட 1 நபர் இதனால் பாதிக்கப்படுகிறார். இது ஒரு சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்ல - இது ஒரு தேசிய நெருக்கடி. மக்கள் நிற்க முடியாவிட்டால் இந்தியா உயர முடியாது" என்று அவர் கூறினார்.

தொழிலதிபர்களைப் போல யோசிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் மருத்துவ நிபுணர்களுக்கு அவர் முக்கிய சவால் ஒன்றும் விடுத்தார்:

முதுகுத் தண்டு பிரச்சனைகள் மோசமடைவதற்கு முன்பே கண்டறியக்கூடிய AI- இயங்கும் கருவிகளை உருவாக்கவும், கிராமங்களுக்கு குறைந்த கட்டண மொபைல் அறுவை சிகிச்சை மையங்களை உருவாக்கவும், எதிர்கால முதுகுத் தண்டு மருத்துவமனைகளை ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் பயோ-தொழில்நுட்ப உள்வைப்புகளுடன் வடிவமைக்கவும் சவால் விடுத்தார்.

அதானி ஹெல்த்கேர் - ஒரு புதிய தொடக்கம்

அகமதாபாத் மற்றும் மும்பையில் புதிய "அதானி ஹெல்த்கேர் அமைப்புகள்" விரைவில் திறக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இவை 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக இருக்கும், அவை Mayo Clinic ஆல் இயக்கப்படும். இவை ஆராய்ச்சி, நோயாளி கவனிப்பு, ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் பயிற்சிக்கான இடங்களாக இருக்கும். இங்கே ஏஐ பயன்படுத்தப்படும், என்று அதானி தனது உரையில் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+