கொரோனாவை 80 % வரை குணப்படுத்தும் ஃபேவிபிராவிர் மருந்து... மாத்திரை ஒன்றின் விலை ரூ.103
மும்பை: கொரோனாவை 80% வரை குணப்படுத்தக்கூடிய ஃபேவிபுளு மருந்தை மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் தயாரித்துள்ளது.
வைரஸை எதிர்க்கக் கூடிய இந்த ஃபேவிபிராவிர் (ஃபேவிபுளு) மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஃபேவி புளு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை நிறுவனம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கிளென்மார்க் நிறுவனம் ஃபேவிபிராவிர் (ஃபேவிபுளு) என்ற மருந்தை தயாரித்துள்ளது. கொரோனா பாதிப்பு லேசாக உள்ளவர்கள் மற்றும் அபாயக் கட்டத்தை எட்டாதவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்ததில் 80% வரை நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது. இந்த மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான அனுமதியை டி.சி.ஜி.ஐ. வழங்கியுள்ளது.

இந்தியாவில் விற்பனை
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கிவிட்டதால் இந்தியா முழுவதும் இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது. மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்படுள்ளதால் 34 மாத்திரைகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குவதால் இந்த மருந்தின் தேவை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

மருந்தகங்கள்
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதால் ஃபேவிபிராவிர் மாத்திரை அனைத்து மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும். ஆனால் மருத்துவர் சீட்டு இல்லாமல் இந்த மருந்தை யாரும் பெற முடியாது. அதேபோல் நோயாளிகளின் ஒப்புதலை கையெப்பம் மூலமாக பெற்ற பின்னரே அவர்களுக்கு ஃபேவிபிராவிர் மருந்து கொடுக்கப்படும்.

புதிய மருந்து
இதனிடையே கொரோனா முற்றிய நோயாளிகளுக்காக ஃபேவிபிராவிர், யூமிபெனோவிர் என்ற இரு மருந்துகளை பயன்படுத்தி புதிய மருந்து கண்டறியும் முயற்சியிலிம் கிலேன்மார்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கொரோனாவுக்கு எந்த மருந்தும் இல்லை என்ற சூழலில், சற்றே ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் ஃபேவிபிராவிர் (ஃபேவிபுளு) மாத்திரையை கண்டுபிடித்துள்ளது கிளென்மார்க் நிறுவனம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications