கோட்சே காந்தியை கொன்றதை இந்து மதத்தோடு தொடர்புபடுத்த தேவையில்லை.. பிரகாஷ் அம்பேத்கர்
மும்பை: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதனை இந்து மதத்தோடு தொடர்புபடுத்தி பேசக்கூடாது என அம்பேத்கரின் பேரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே எனவும் கூறினார். அவரின் இப்பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய பெண் சாதுவும், போபால் மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பிரக்யா சிங், கோட்சே ஒரு தேசப்பக்தர் என்றார். கடும் எதிர்ப்புகளாலும், கட்சி தலைமையின் கண்டனத்தை அடுத்தும் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் நாதுராம் கோட்சேவை ஒரு தேசபக்தர் என பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பிரக்யா சிங் கூறியது குறித்து, சட்ட மேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி தான் என தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஒருவரை கொலை செய்வதே பயங்கரவாதம் தான். இதை சொல்லும் அதே சமயத்தில், இந்த பயங்கரவாத செயலுக்கு இந்து மதம் தான் காரணம் என்று கூறுவது சரியல்ல என்றார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரங்களுக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்றும் பிரகாஷ் அம்பேத்கர் குற்றம் சாட்டினார் வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் அவர் கூறினார்
இது குறித்து மேலும் கூறுகையில் மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் அனைத்து 288 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட வேண்டும் என்று எனது கட்சித் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதன்படி வஞ்சித் பகுஜன் அகாடி அனைத்து தொகுதியில் போட்டியிடும் என்றார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications