ஒரே செஷன்.. ஹெச்டிஎப்சி பங்குதாரர்களின் ரூ.49,355 கோடி காலி.. அல்லோகலமான மார்க்கெட் நிலவரம்
மும்பை: ஒரே செஷனில் இன்று ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குதாரர்களின் ரூ.49,355 கோடி காலியான ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளில் ஹெச்டிஎப்சி ஒன்றாகும். ஆனால் இது தனியார் வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பங்குகளில் முதலீடு செய்வது என்பது பங்குதாரர்களுக்கு லாபமானதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் இன்று ஹெச்டிஎப்சி வங்கிகளின் பங்குதாரர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. அதாவத இன்றைய பங்கு சந்தையின் இந்த வங்கியின் பங்குகள் இன்று 4 சதவீதம் சரிந்து ரூ.1,563.90 என முடிவடைந்தது.
முன்னதாக இன்று ஒரே செஷனில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குதாரர்களின் ரூ.49,355 கோடி கோடியை இழந்தனர். அதாவது ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மூலதனம் என்பது முந்தைய வர்த்தக அமர்வில் ரூ.12,34,103.99 கோடியாக இருந்தது. இது அடுத்த வர்த்தக அமர்வில் ரூ.11,84,748.93 கோடியாகக் குறைந்ததே பங்குதாரர்கள் ரூ.49,355 கோடியை இழந்ததற்கு முக்கிய காரணமாகும்.
இது கடந்த 4 மாதங்களில் ஹெச்டிஎப்சி பங்குதாரர்கள் சந்தித்த அதிகபட்ச இழப்பாகும். இதற்கு முன்பு கடந்த மே மாதம் 5ம் தேதி இந்த வங்கியின் பங்குதாரர்கள் இதேபோல் மோசமான நிலையை சந்தித்தனர். அதன்பிறகு இயல்பான நிலை தொடர்ந்த நிலையில் தற்போது ஹெச்டிஎப்சி பங்குதாரர்கள் ஒரே செஷனில் ரூ.49,355 கோடியை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஹெச்டிஎப்சி வங்கியுடனான சமீபத்திய இணைப்புகள் நிதி விவகாரத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.உயர் பணப்புழக்கம் (Higher Liquidity) மற்றும் ஐசிஆர்ஆர் ஆகியவற்றால் என்ஐஎம் மீதான தாக்கம் என்பது எதிர்பார்ததை விட அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது. இது பங்குகள் மீதான முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருந்ததும் கவனிக்கத்தக்கதாகும்.
மேலும் வங்கியின் வாராகடன் நிலவரம் என்பது கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் 1.2 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதம் 1 க்கு பிறகு 1.4 சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் ஒருவகை காரணமாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் ஹெச்டிஎப்சி வங்கி தனது முதல் consolidated earnings குறித்த விபரத்தை அடுத்த மாதம் அறிவிக்க உள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications