Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பை மேயர் யார்? ஒரு சிறுவன் எடுக்கும் சீட்டில் ஒளிந்திருக்கும் ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது. இருப்பினும், இதுவரை மும்பை மேயர் யார் என்பதில் விடை கிடைக்கவில்லை. அங்கு மும்பை மேயரை தேர்வு செய்ய இருக்கும் சில விதிமுறைகளே இதற்கு காரணமாகும்! இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியான பி.எம்.சி-யின் (BMC) புதிய மேயர் யார் என்பதை அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

How Mumbai New Mayor Elects After BJP-Shinde Win in polls school kid will elect the face of Mumbai

மும்பை மேயர்

வெற்றி பெற்ற 'மகாயுதி' கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையே மேயர் பதவிக்காகக் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், அரசியல் காரணங்களைத் தாண்டி, சட்டப்பூர்வமான சில நடைமுறைகளே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம். சட்டப்படி, மும்பை மேயர் பதவி என்பது சுழற்சி முறையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்களுக்குச் சுழற்சி முறையில் பதவி ஒதுக்கப்படும். இந்த இடஒதுக்கீடு எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, 'குலுக்கல் முறை' மூலம் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் தீர்மானிக்கப்படும். இந்தக் குலுக்கல் முடிந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே, கட்சிகளால் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க முடியும்.

லாட்டரி

அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய மும்பையில் 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேயர் லாட்டரி நடத்தப்படும். இந்தக் குலுக்கல் பொதுமக்களின் முன்னிலையிலோ அல்லது மாநகராட்சி அலுவலகத்திலோ நடைபெறும் நாள் மற்றும் நேரம் அறிவிக்கப்படும். ஒவ்வொரு இடஒதுக்கீடு பிரிவின் பெயர்களும் தனித்தனி காகிதச் சீட்டுகளில் எழுதப்பட்டு, அவை மடிக்கப்பட்டு ஒரு வெளிப்படையான பாத்திரத்தில் அல்லது பெட்டியில் போடப்படும். எந்தவிதமான முறைகேடும் நடக்கக்கூடாது என்பதற்காக, பொதுவாக அங்கிருக்கும் ஒரு சிறு குழந்தையை அழைத்து ஒரு சீட்டை எடுக்கச் சொல்வார்கள்.

குழந்தை எடுக்கும் சீட்டில் என்ன பிரிவு எழுதப்பட்டுள்ளதோ (உதாரணமாக: 'பொதுப் பிரிவு - பெண்' அல்லது 'பட்டியல் சாதியினர்'), அதுவே அந்த இரண்டரை ஆண்டுகள் மும்பை மேயர் பதவிக்கான இடஒதுக்கீடாக இறுதி செய்யப்படும். தற்போது 2026 மும்பை மேயர் தேர்தலுக்கான குலுக்கல் ஜனவரி 2026-ன் இறுதி வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

கடந்த காலங்கள்

இதற்கு முன்பும் மும்பையில் 2017ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில், அப்போது ஒரு முறை லாட்டரி நடத்தப்பட்டது. அதேபோல 2.5 ஆண்டுகள் கழித்து 2019ம் ஆண்டிலும் லாட்டரி முறை நடத்தப்பட்டது. மும்பை மாநகராட்சி பள்ளியில் இருந்து அழைத்து வரப்படும் மாணவரே இந்த லாட்டரியை எடுப்பார். கடந்த 2017 மற்றும் 2019 என இரண்டு முறையும் லாட்டரியில் பொது பிரிவினர் என்ற லாட்டரியே எடுக்கப்பட்டது. அதாவது "பொது பிரிவு" சீட்டு வந்தால் எந்தவொரு பிரிவைச் சேர்ந்தவரும், ஆண்- பெண் என இருவரில் யார் வேண்டுமானாலும் மேயராக தேர்வாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது தெரியும்!

மும்பை மேயர் என்பவர் நகரின் 'முதல் குடிமகன்' மற்றும் கவுரவத் தலைவர் ஆவார். 227 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், 114 உறுப்பினர்களின் ஆதரவு பெறுபவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசால் நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரியான, மாநகராட்சி ஆணையரிடமே இருக்கும். குலுக்கல் முறை முடிந்து, இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட ஒரு வாரக் காலத்திற்குள் மும்பைக்கான புதிய மேயர் யார் என்பது தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+