வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்.. அசாம் – அருணாச்சல பிரதேசத்தில் மோசமான நிலைமை
கவுஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பேய் மழை பெய்து வருகிறது. இதனால் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேம்பாலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாமின் திமாஜி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அசாமின் திமாஜி மாவட்டம், அர்சிபதார் - சிமன் சாப்ரி ரயில்வே நிலையங்களுக்கு இடையேயான ரயில்வே மேம்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நடுவே பஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், ''அசாமில் திமாஜி மாவட்டத்தில் 4 வருவாய் வட்டங்கில் 69 கிராமங்களில் வசிக்கும் சுமார் 45 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்னர். இங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என கூறியுள்ளார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு - நிவாரண பணிகளை வேகமாக மேற்கொள்ள முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.
மேலும் 6 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்தது. அதேபோல், அருணாச்சல பிரதேசத்தில் 5 மாவட்டங்களில் 'ரெட் அலர்ட்' உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 200 மில்லி மீட்டர் கனமழை பெய்தது. ஜிரோ - நாகர்லாகன் பகுதியில் 14 சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அதேபோல் டாபோரிஜோ பகுதியில் 11 சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர்.
இதற்கிடையே தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications