பிரேமலதா விஜயகாந்த் கூட பரவா இல்லப்பா.. பாஜக, இந்தியா அணியிலும் என்சிபி- சரத்பவார் உலகமகா முடிவு!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் ( என்சிபி) கட்சியில் அஜித்பவார் தனியாக பிரிந்து செல்லவும் இல்லை; என்சிபி இரண்டாக உடையவும் இல்லை; எங்கள் கட்சியின் சிலர் மட்டும் பாஜகவை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுத்துள்ளனர் என அக்கட்சித் தலைவர் சரத்பவார் கொடுத்துள்ள விளக்கம் "இந்தியா" கூட்டணி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் என்சிபி முக்கிய கட்சியாகவும் சரத்பவார் முதன்மையான தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அதேநேரத்தில் என்சிபியின் அஜித்பவார் மற்றும் சிலர் மகாராஷ்டிரா பாஜக அரசில் இணைந்துள்ளனர். அஜித் பவார் துணை முதல்வராகி இருக்கிறார்.

தேர்தலுக்காக என்சிபியை பாஜக இரண்டாக உடைத்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. சரத்பவாரும் கூட, அமலாக்கத்துறைதான் யார் யார் எந்தெந்த கட்சியில் சேர வேண்டும் என முடிவு செய்கிறது என விமர்சித்திருந்தார்.
அதேநேரத்தில் சரத்பவாரை சமாதானப்ப்டுத்தி ஒட்டுமொத்த என்சிபியையும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்றி பாஜக கூட்டணிக்கு அழைத்துச் செல்வதில் அஜித்பவார் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பாக சரத்பவாரை தொடர்ந்து சந்தித்தும் பேசி வருகிறார்.
இம்மாத இறுதியில் மும்பையில் "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குள் என்சிபியை பாஜக பக்கம் இழுத்துப் போய்விடுவது என்பது அஜித்பவாரின் அஜெண்டாவாகவும் இருக்கிறது. அவரது இந்த முயற்சி அனேகமாக வெற்றி பெற்றதாகவே தெரிகிறது. கடந்த சில நாட்களாக தேசியவாத காங்கிரஸின் தலைவர்களான சரத்பவாரும் சுப்ரியா சுலேவும் பேசி வரும் கருத்துகள ":இந்தியா" கூட்டணி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சரத்பவாரின் மகளான லோக்சபா எம்பி சுப்ரியா சுலே கூறுகையில், தேசியவாத காங்கிரஸில் எந்த பிளவும் இல்லை. பாஜக ஆட்சிக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை அந்த கட்சி இழுத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். பாஜகவை ஆதரிப்பது என ஒரு நிலைப்பாடுதான் எடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் தேசியவாத காங்கிரஸ்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் வலியுறுத்துவோம் என்றார்.
இன்று சரத்பவாரும் இது தொடர்பாக கூறுகையில், என்சிபியில் ஒரு பிளவும் இல்லை. ஒரு சிலர் பாஜகவை ஆதரிக்கிறார்கள். அவ்வளவுதான். அஜித்பவார் எங்க கட்சித் தலைவர்தான். அவர் பாஜகவை ஆதரிக்கிறார். எங்க கட்சியில் எந்த பிளவுமே இல்லை. பாஜகவை ஆதரிக்கிறாகள் என்பதாலேயே என்சிபி இரண்டாக பிளவுபட்டுவிட்டதாக சொல்ல முடியுமா? பாஜகவுக்கு ஆதரவு என்பது அவர்களது முடிவு.. அவ்வளவுதான் என்றார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும். தேர்தலின் போது கடைசி நிமிடம் வரை இப்படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கும். பின்னர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிடும் தேமுதிக. ஆனால் சரத்பவாரோ, பாஜக அணியிலும் எங்க கட்சியினர் இருப்பாங்க.. இந்தியா கூட்டணியிலும் இருப்பாங்க என மதில் மேல் பூனையாக பேசியிருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications