காதலனின் மர்ம உறுப்பு.. புத்தாண்டில் மும்பை காதலி தந்த பரிசு.. கனவில் கூட நினைக்காத சம்பவம்
மும்பை: திருமணத்திற்கு முன்பே இன்றைக்கு ஆண், பெண் இருவருமே சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் அப்படி சேர்ந்து வாழும் போது ஆரம்பத்தில் இன்பமாக இருக்கும் வாழ்க்கை, ஒரு கட்டத்தில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறது. இதில் காதலன் அல்லது காதலி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அப்படியே பிரிந்துவிடுவோம் என்று நினைக்கும் போது சிக்கல் ஏற்படுகிறது. அப்படித்தான் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனின் மர்ம உறுப்பை மும்பையில் காதலி இல்லாமல் செய்துவிட்டார்.
இன்றைக்கு பலர் காதலிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான காதல் உடல் நெருக்கத்தை தாண்டி, உணர்வு பூர்வமாக, உள்ளப்பூர்வமாக நெருக்கம் ஆவது இல்லை.. வெறும் காமத்தை காதல் என்று புரிந்து கொண்டு சினிமா வசனம் பேசுகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் எதார்த்தம் என்பது திருமணம் முடிந்த பின்னர் அல்லது திருமணத்தின் போது தான் தெரிகிறது. காதலிக்க எந்த பொறுப்பும் தேவைப்படுவது இல்லை.

ஆனால் நல்ல குணம், நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல படிப்பு, சொத்து, நல்ல குடும்பம் என எல்லா அம்சமும் பொறுந்தினால் தான் திருமணம் சாத்தியம். இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தாலும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் இருக்க வேண்டும். ஆனால் எதையும் புரியாமல் சினிமாவை பார்த்து காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைக்கிறர்கள். ஒரு சிலர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி ஏமாற்றுகிறார்கள். அப்படி திருமணத்திற்கு மறுக்கும் போது சிக்கல் வருகிறது. மும்பையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மும்பை சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதனை ஏற்று காதலனும் சென்றிருக்கிறார். இருவரும் வீட்டில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் நெருக்கமான நேரத்தில் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துவிட்டாராம்.
இதில் படுகாயமடைந்த அந்த நபர், வலியால் துடித்துள்ளார். அந்த பெண்ணிடமிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.. அவரது சகோதரர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.என்.தேசாய் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும், அவர் மீது பாரதிய நியாய சன்கிதா சட்டப்பிரிவுகளின் கீழ், ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications