மும்பைக்கு வரும் விமானங்கள் உஷார்! சிக்னல் இழப்பு ஏற்பட வாய்ப்பு! விமானிகளுக்கு பறந்த எச்சரிக்கை!
மும்பை: மும்பைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில், விமானப் போக்குவரத்து வழித்தடங்களில் ஜிபிஎஸ் குறுக்கீடு அல்லது சிக்னல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று விமானிகளுக்கு நோட்டம் என்ற அவசரக்கால அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
இன்று தொடங்கி நவ.17 வரை இந்த பிரச்சனை இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செயற்கைக்கோள் அடிப்படையிலான நேவிகேஷன் அமைப்பில் ஏற்படும் தடங்கல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு விமானிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பை, 'தி இன்டெல் லேப்' என்ற செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு நிறுவனத்தில் பணிபுரியும் புவிசார் நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் தனது X தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,
"மும்பைக்கு அருகிலுள்ள இந்திய வான்வெளியில் விமானப் போக்குவரத்து வழித்தடங்களை சுற்றியுள்ள பகுதியில் ஜிபிஎஸ் குறுக்கீடு அல்லது இழப்பு குறித்து இந்தியா 'நோட்டம்' எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, டெல்லியைச் சுற்றியும் இதேபோன்ற குறுக்கீடுகள் இருப்பதாக கணிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நவ. 17 வரை இந்த பிரச்சனை இருக்கும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நோட்டம் எனில், விமானப் பணியாளர்களுக்கான அவசர அறிவிப்பு அல்லது விமானிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு என்று அர்த்தம். விமான நிறுவனங்கள், விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்னர் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதில், ஜிபிஎஸ் செயலிழப்பு குறித்து தெரிய வந்தால் 10 நிமிடத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது நோட்டம் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்சனை இருந்தது. இதனை 'ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்' என்று சொல்வார்கள். தவறான சிக்னல்களை அனுப்பி, நேவிகேஷன் அமைப்பை தவறான இடம், வேகம் அல்லது நேரத்தைக் காட்டச் செய்வதாகும். இப்படி நடந்தால் விமானி தவறான திசையில் விமானத்தை திருப்புவார். இதனால் விபத்தும், பெரிய அளவுக்கு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஜிபிஎஸ் ஜாமிங்கில் பிரச்சனையிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் ஜாமிங் என்பது ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் சிக்னல்களைப் பகிர்ந்துகொள்ளும் அலைவரிசையை மட்டுமே தடுக்கும்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம்












Click it and Unblock the Notifications