Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி மும்பை- அமீரகம் ஜஸ்ட் இரண்டு மணி நேரம்! கடலுக்கு அடியில் அமையும் பிரம்மாண்ட ரயில் திட்டம்! செம

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவையும் ஐக்கிய அமீரகத்தையும் கடலுக்கு அடியில் இயக்கப்படும் ரயில்கள் மூலம் இணைக்கும் ஒரு பிரம்மாண்டத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. காந்த மிதப்பு தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் இந்த ரயில் மணிக்கு 600 முதல் 1,000 கி.மீ. வேகத்தில் செல்லும். இதன் மூலம் மும்பையில் இருந்து வெறும் 2 மணி நேரத்தில் சென்றுவிட முடியுமாம்.

மும்பையில் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, விமான நிலையம் பக்கமே போகாமல் மதியம் உணவை துபாயில் சாப்பிட்டால் எப்படி இருக்கும். நல்ல கதை தான் என உங்களுக்குத் தோன்றும். ஆனால், இது கதை மட்டும் இல்லை. சீக்கிரமே நிஜமாகவும் மாறப் போகிறது. இந்தப் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டத்தைச் சாத்தியமாக்க முக்கியமான முயற்சி எடுக்கப்படுகிறது.

India-UAE Underwater Train from Mumbai to Dubai 2-Hour Arabian Sea Train might be a game changer
Photo Credit:

ரயில்

இந்தியா- ஐக்கிய அமீரகத்திற்கு இடையே மக்கள் பயணிக்கும் முறையே இது மொத்தமாக மாற்றி அமைக்கும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில், அவர்களுக்கும் இது மிக பெரியளவில் உதவும். இந்தத் திட்டம் தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அமீரகத்தைச் சேர்ந்த என்ற நேஷனல் அட்வைசர் பியூரோ லிமிடெட் நிறுவனம் தான் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மும்பை மற்றும் அமீரகம் கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதை மூலம் இணைக்கப்படும். அதில் ரயில்கள் மகலெவ் அதாவது காந்த மிதப்பு தொழில்நுட்பத்தில் இயக்கப்படும். இதன் மூலம் ரயில்கள் வழக்கமான வேகத்தைக் காட்டிலும் வேகமாக மணிக்கு 600 முதல் 1,000 கி.மீ. வேகத்தில் இயங்கும்.. இதை அவர்கள் டீப் ப்ளு எக்ஸ்பிரஸ் (Deep Blue Express) என்கிறார்கள்

2 மணி நேரமாகக் குறையும்

இப்போது விமானத்தில் செல்ல செக்-இன், செக்யூரிட்டி செக்.. வெளியே பல சோதனைகள் என மொத்தம் 10 மணி நேரம் வரை ஆகும். ஆனால், இந்த டீப் ப்ளு எக்ஸ்பிரஸ் செயல்பாட்டிற்கு வந்தவுடன் பயண நேரம் சுமார் 2 மணிநேரமாகக் குறையுமாம். இதன் காரணமாகவே இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தச் சுரங்கப் பாதையில் பயணிகளை மட்டுமின்றி, சரக்குகளையும் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வரும். அதேபோல இங்கிருந்து அமீரகத்திற்குக் குடிநீர் செல்லுமாம். இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவையும் அமீரகத்தில் குடிநீர்த் தேவையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில், இரு நாடுகளின் தேவையையும் இது பூர்த்தி செய்யும்!

செலவு

அதேநேரம் இந்தத் திட்டம் சாத்தியம் தானா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏனென்றால் இந்தத் திட்டத்திற்கு $50 பில்லியன் பட்ஜெட் தேவைப்படும். உலகில் வேறு எந்தவொரு உட்கட்டமைப்பு திட்டத்திற்குத் தேவையான தொகையை விட இது பல மடங்கு அதிகமாகும். எனவே, இதை லாபகரமாகச் செயல்படுத்த முடியுமா என்பது முதல் கேள்வி!

சாத்தியம் தானா?

மேலும், அரபிக் கடலில் சில பகுதிகளில் 3000 மீட்டர் வரை ஆழம் இருக்கும். அந்தப் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தற்போதைய தொழில்நுட்பத்தால் முடியாத காரியம். எனவே, அதுவும் ஒரு சிக்கல். மேலும், இது ஒரு தனியார் நிறுவனத்தின் திட்டம் தான்.. இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுகள் இத்திட்டத்தை இதுவரை அங்கீகரிக்கவில்லை. நேஷனல் அட்வைசர் பியூரோ லிமிடெட் நிறுவனமும் கூட இத்திட்டம் இப்போது தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும் சாத்தியக்கூறு ஆய்வுகள் நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+