சபாஷ் ரத்தன் டாடா.. முன்னாள் ஊழியருக்காக.. இப்படியும் ஒரு தொழிலதிபர் இருக்க முடியுமா.. நெகிழ்ச்சி!
மும்பை: தொழிலதிபர் ரத்தன் டாடா தனது முன்னாள் ஊழியர் ஒருவருக்காக செய்த சத்தம் இல்லாத ஒரு செயல் சமூக வலைத்தளங்களில் மக்களால் சிலாகிக்கப்படுகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ரத்தன் டாடா. ஆனால் சிறிதளவுகூட சமூக ஓட்டத்திலிருந்து அவர் விலகி இருப்பது கிடையாது என்பதுதான் சிறப்பம்சம்.
வெளியே தெரியாமல் பல்வேறு உதவிகளையும் ரத்தன் டாடா செய்தபடி இருக்கிறார். தனது தொண்டு நிறுவனம் மூலமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்கிறார்.
|
வெளியான புகைப்படம்
இவையெல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். ஆனால், அவர் தற்போது முன்னாள் ஊழியர் ஒருவருக்காக செய்துள்ள செயல்தான், பலரது புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது. சத்தமே இல்லாமல் அவர் செய்த அந்த விஷயம் தற்போது புகைப்படமாக வெளியாகி சுற்றிவருகிறது.

முன்னாள் ஊழியர்
ரத்தன் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதுபற்றி இவருக்கு தற்போது தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் பணியில் இல்லை என்ற போதிலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை பார்க்க வேண்டும் என்று கிளம்பி சென்றுவிட்டார் ரத்தன் டாடா.

ஊர் விட்டு ஊர்
இதுகூட ஒரு பெரிய விஷயம் இல்லை. அந்த ஊழியர் இருப்பது மும்பையில் கிடையாது. புனே நகரத்தில். 83 வயதாகும் நிலையில், முன்னாள் ஊழியருக்காக, இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்றெல்லாம் யோசிக்கவில்லை ரத்தன் டாடா. மீடியாக்கள் உள்ளிட்ட எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக முன்னாள் ஊழியர் வீட்டுக்கே சென்று உடல் நலம் விசாரித்துள்ளார். அவரிடம் முன்னாள் ஊழியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு பேசக்கூடிய புகைப்படத்தை யாரோ எடுத்துள்ளனர். அவர்களுடன் மிகவும் பணிவாக பேசிக்கொண்டிருக்கிறார் ரத்தன் டாடா.

சபாஷ் ரத்தன் டாடா
இந்த புகைப்படம் யோகேஷ் தேசாய் என்பவரால் லிங்டின் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். அது தற்போது வைரலாக சுற்றிவருகிறது. சமூக வலைதளங்களில் ரத்தன் டாடா பற்றி புகழ்ந்து நெட்டிசன்கள் சிலாகித்து வருகிறார்கள். பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் தராத பல நிறுவனங்கள் இருக்கும் நாட்டில், முன்னாள் ஊழியர் ஒருவரை, வயது முதிர்ந்த காலத்திலும், வேறு ஒரு ஊருக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்து வருவது என்பதெல்லாம் யாரும் நினைத்துக் கூட பார்த்திராத விஷயம். ஆனால், எந்த விளம்பரமும் இல்லாமல், அதை செய்துவிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications