ரூ.80 கோடி மதிப்பு.. 150 ஏக்கர்! மலைக்க வைக்கும் சல்மான் கானின் பண்ணை வீடு! உள்ளே இத்தனை வசதிகளா?
மும்பை: பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சல்மான் கானுக்கு சொந்தமாக மகாராஷ்டிரா மாநிலம் பான்வெலில் அமைந்து இருக்கும் மிகப்பெரிய பண்ணை வீட்டில் இருக்கும் வசதிகள் பார்ப்போரை பிரமிக்க செய்து வருகிறது. அதில் உள்ள வசதிகள் என்ன? அதன் மதிப்பு என்ன? விரிவாக பார்ப்போம்.
"கேலக்சி அபார்ட்மெண்ட், மும்பை." மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இந்த சிறிய முகவரியை எந்த ஆட்டோ, டாக்சி ஓட்டுநரிடம் சொன்னாலும் உடனே வரும் பதில் சல்மான் கான் வீட்டுக்கு போக வேண்டுமா என்று. பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் சல்மான் கான் இந்த முகவரி மும்பையின் ஒரு அடையாளமாகவே உள்ளது.

இந்த கட்டிடத்தில்தான் சல்மான் கான் தனது ஒட்டுமொத்த குடும்பத்துடனும் வசித்து வருகிறார். ஆனால், இதற்கு இணையாக சல்மான் கான் அதிகம் நேசிக்கும் அவரது வீடு மும்பைக்கு வெளியில் உள்ளது. அது மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள பான்வெல் என்ற நகரில் அமைந்து இருக்கும் ஒரு பண்ணை வீடு.
மும்பையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள பான்வெல் நகரில் இருக்கும் இந்த பண்ணை வீட்டில் சல்மான் கான், ஓய்வு காலங்களில் தனியாகவும், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அதிக நேரத்தை செலவிடுவார் என்று கூறப்படுகிறது. சல்மான் கான் தன்னுடைய இந்த பண்ணை வீட்டுக்கு தன்னுடைய சகோதரி அர்பிதா கானின் பெயரான அர்பிதா ஃபார்ம்ஸ் என்று வைத்து இருக்கிறார்.

அண்மையில் அவரது "கிசி கா பார் கிசி கி ஜான்" படம் வெளியான பிறகு அந்த பண்ணை வீட்டில் உள்ள நீச்சள் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணை வீட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதற்குள் 3 அரண்மனை வடிவ பங்களாக்கள், மிகப்பெரிய நீச்சள் குளம், உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளன.
குதிரைகளின் மீது அதிக பிரியம் கொண்ட சல்மான் கான் இந்த பண்ணை வீட்டில் அதிக குதிரைகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனி குதிரை லாயமும் உள்ளே இருக்கிறது. அத்துடன் குதிரை சவாரி செய்வதற்காகவும் பண்ணை வீட்டில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாம். அத்துடன் தனது பண்ணை வீட்டில் சல்மான் கான் இயற்கை விவசாயமும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக முதல் கொரோனா அலையின்போது ஊரடங்கு காலத்தில் அவர் இயற்கை விவசாயம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். பச்சை பசேலென, மரங்களால் சூழப்பட்ட, பரந்து விரிந்த இந்த பண்ணை வீட்டின் தற்போது நிலம் மற்றும் உள்ளே இருக்கும் வசதிகளை வைத்து கணக்கிட்டால் அதன் மொத்த மதிப்பு ரூ.80 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications