80% வேலைவாய்ப்பு மண்ணின் மைந்தர்களுக்குத்தான்.. நாம் தமிழர் போல அதிரடி காட்டும் சிவசேனா.. மாஸ்!
மகாராஷ்டிராவில் 80% வேலைவாய்ப்பு மகாராஷ்டிரா மாநில இளைஞர்களுக்கே வழங்கப்படும் என்று சிவசேனா சட்டம் கொண்டு வர இருக்கிறது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் 80% வேலைவாய்ப்பு மகாராஷ்டிரா மாநில இளைஞர்களுக்கே வழங்கப்படும் என்று சிவசேனா சட்டம் கொண்டு வர இருக்கிறது. தமிழகத்திலும் நாம் தமிழர் கட்சி இதேபோல் சட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்துள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் சிவாஜி பார்க்கில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்களாக அங்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் மேடை இதற்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு சுமார் 2000 போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மசோதா எப்படி
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக 80% உள்ளூர் மற்றும் மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட உள்ளது. இதற்காக சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. விரைவில் இது சட்டமாக வர உள்ளது.

இனிமேல் எப்படி
அதன்படி இனிமேல் மகாராஷ்டிராவில் மராட்டிய மக்களுக்குத்தான் அரசு மற்றும் தனியார் பணிகள் முன்னுரிமை அளிக்கப்படும். மராட்டிய மொழிக்குத்தான் அங்கு தேர்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

சிவசேனா எப்படி
பொதுவாக சிவசேனா மாநில உரிமை முன்னுரிமை அளிக்கும் காட்சியாகும். சிவசேனா உருவாக்கப்பட்டதே மாநில உரிமைகளை மையமாக வைத்துதான். அவர்களின் கொள்கையே மாநில சுயாட்சி, மொழி கொள்கை மட்டும்தான். தற்போது அதற்கு ஏற்றபடி அந்த செயல்பட தொடங்கி உள்ளது.

இன்னொரு பக்கம்
தமிழகத்திலும் நாம் தமிழர் கட்சி இதேபோல்தான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும், நீங்கள் வாழ வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஆனால் இங்கு நாங்கள்தான் ஆள வேண்டும் என்று நாம் தமிழர் உறுதியாக இருக்கிறது.

ஆந்திர பிரதேசம்
ஆந்திராவிலும் இதேபோல் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம் நாம் தமிழர் கொள்கை நாடு முழுக்க பல மாநிலங்களில் பரவி வருவதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications