மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் "விசிக".. எத்தனை தொகுதிகளில் போட்டி தெரியுமா?
மும்பை: விடுதலை சிறுத்தைகள் கட்சி மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளர். ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம் கட்சியுடன் விசிக களமிறங்க இருப்பதாகவும், இதர தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி நிலவ உள்ளது.

தற்போது, சிவசேனா + பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி உடைந்ததற்கு பாஜகவே காரணம் என்றும் சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் விமர்சித்து வருகிறார்கள். வரும் தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்தி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால், மகாராஷ்டிரா தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
நாட்டின் மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றாகவும், நிதி தலைநகரான மும்பையை கொண்டு இருப்பதாலும் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்க எற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் உள்ளனர். இதனால், தமிழர்களின் வாக்குகளை பெறவும் அங்குள்ள அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூடடணி அமைத்து போட்டியிட உள்ளதாகவும், 10 சட்டமன்ற தொகுதிகளில் விசிக வேட்பாளர்களை நிறுத்தும் என்று அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தல் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிப்போம். கங்காபூர், பத்நாபூர், நாந்தெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர் அவுரங்கபாத், (மையம்), முல்லுண்டு (மும்பை), கன்னட் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிட உள்ளது" என்றார்.
-
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications