ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
மும்பை: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மகாராஷ்டிரா சட்டபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் சபாநாயகர் நானா படோல், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் எண்ணிக்கை தெரிய வேண்டும் என்பதற்காக இதை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், 2021-ல் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியின மேம்பாட்டுக்காக ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை எனவும் சபாநாயகர் நானா படோல் சுட்டிக்காட்டினார். தம்மிடம் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பிரதிநிதிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இத்தீர்மானத்தின் மீது பேசிய துணை முதல்வர் அஜித் பவார், இது தொடர்பாக நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். பின்னர் அடுத்த மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தில் இத்தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார். இத்தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
இத்தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாமக உள்ளிட்ட கட்சிகள் நீண்டகாலமாக இக்கோரிக்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications