மகாராஷ்டிரா.. என்சிபிக்கு துணை முதல்வர்.. காங்கிரசுக்கு சபாநாயகர்.. ஆலோசனையில் இறுதி முடிவு!
மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 13 அமைச்சரவை பொறுப்புகள் அளிக்கப்பட உள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், 15 அமைச்சரவை இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் மொத்தம் 13 அமைச்சரவை பொறுப்புகள் அளிக்கப்பட உள்ளது. சிவசேனாவிற்கு 15 அமைச்சரவை இடங்கள் அளிக்கப்படுகிறது.
சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. மூன்று கட்சிகள் இணையும் மகா விகாஸ் ஆகாதி என்று புதிய கூட்டணிக்கான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று 3 கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட ஆலோசனையில் அமைச்சரவை ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டணியின் தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நியமிக்கப்பட்டார். இவர் நாளை மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

எத்தனை இடம்
இந்த நிலையில் இந்த கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சிவசேனா மொத்தமும் 15 அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள இருக்கிறது. இதில் 8 அமைச்சரவை பதவிகள் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

என்சிபி எத்தனை இடம்
இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் கட்சி மொத்தம் 15 அமைச்சரவை பதவிகளை பெற உள்ளது. அந்த கட்சிக்கு துணை முதல்வர் பதவி உறுதியாகி உள்ளது. இதில் சரத் பவாருக்கும் முக்கியமான அமைச்சரவை பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இன்னும் சில முக்கிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் கட்சி
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 13 அமைச்சரவை பதவி வழங்கப்பட உள்ளது. இதில் 9 பதவிகள் முக்கியமான அமைச்சரவை பதவிகளாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அங்கு அசோக் சவானுக்கு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பாஜக எழுச்சி
ஆம் மகாராஷ்டிராவில் பாஜக எழுச்சிக்கு பின் அங்கு காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அதிகாரத்தில் உட்காரவே முடியாது என்றுதான் நினைத்தார்கள். ஆனால் தற்போது சிவசேனாவின் அரசியல் சாகசத்தால் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் தானாக அவர்களுக்கு அமைச்சர் பதவி தேடி வந்துள்ளது.

இல்லை
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு சட்டசபை சபாநாயகர் பதவி வழங்கப்படஉள்ளது . சிவசேனா முதல்வர், தேசியவாத காங்கிரசின் துணை முதல்வர், காங்கிரசின் சபாநாயகர் என்று அதிகாரம் பிரித்துக் கொள்ளப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications