மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா - தாராவியில் 30 பேருக்கு பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,666 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 232 பேர் கொரோனா தொற்று நோயால் இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மேலும் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,666 ஆக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் 572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தாராவியில் அதிகரிப்பு
இதனிடையே மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தாராவியில் மட்டும் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்திருக்கிறது. தாராவியில் இதுவரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

டெல்லி நிலவரம்
டெல்லியில் இன்று மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2081. உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.

குஜராத்தில் 2000-த்தை நெருங்கியது
இதேபோல் குஜராத் மாநிலத்திலும் இன்று ஒரே நாளில் 201 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அகமதாபாத்தில் மட்டும் 153 பேருக்கு இன்று கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000-த்தை நெருங்கிவிட்டது. தெலுங்கானாவில் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 872 ஆகவும் அதிகரித்திருக்கிறது. மொத்தம் 23 பேர் தெலுங்கானாவில் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

உ.பி. 1,000த்தை தாண்டியது
உத்தரப்பிரதேசத்தில் 84 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1184 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18. இதனிடையே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லாக்டவுனால் ஹரித்துவாரில் நடைபெற உள்ள தந்தையின் இறுதி சடங்குகளில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என கூறியுள்ளார்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications