மகாராஷ்டிராவில் 2-வது லாக்டவுன் அமல்? அதிகாரிகள் தயாராக இருக்க முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் 2-வது லாக்டவுன் நடைமுறைப்படுத்த உள்ளது. அதனால் லாக்டவுனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு உள்ளது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,73,461; கொரோனாவால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் எண்ணிக்கை 54,073. இதனால் மகாராஷ்டிராவில் படிப்படியாக லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது.
இன்று மாநில அதிகாரிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது 2-வது லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், மருந்துகள், அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்டவற்றை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக தயாராக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் 2-வது லாக்டவுனை அமுல்படுத்தும் போது எந்த குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அடுத்த ஓரிருநாட்களில் 2-வது லாக்டவுன் தொடர்பான அறிவிப்பை முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிடக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications