இரண்டரை வருடத்திற்கு பின் ஏமாற்ற கூடாது.. கூட்டணியில் முதலில் ஆளப்போவது யார்? மகா.வில் குழப்பம்!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளில் யார் முதலில் முதல்வராக பதவி ஏற்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளில் யார் முதலில் முதல்வராக பதவி ஏற்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் பிரச்சனை இன்றோடு முடிகிறது. அங்கு சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இன்று அந்த கட்சி கூட்டணி உடன்படிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.
இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும். இன்று மும்பையில் நடக்கும் கடைசி ஆலோசனை கூட்டத்திற்கு பின் மூன்று கட்சிகளும் சேர்ந்து அறிவிப்பை வெளியிடும்.

ஐந்து வருடம்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா ஐந்து வருடம் பதவியை அனுபவிக்க போவது கிடையாது. இரண்டரை வருடம் மட்டும்தான் அங்கு சிவசேனா முதல்வர் பதவியில் இருக்கும். இன்னும் இரண்டரை வருடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியில் இருக்கும். இதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி
அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து வருடமும் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும். சிவசேனா சார்பாக ஆதித்யா தாக்கரேவிற்கு பதிலாக உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பார். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் சார்பாக சரத் பவார் முதல்வராக இருப்பார்.

ஒரு கேள்வி
ஆனால் இன்னும் ஒரு கேள்விக்கு மட்டும் மகாராஷ்டிராவில் பதில் கிடைக்கவில்லை. இரண்டு பேரில் யார் முதலில் முதல்வராக பதவி ஏற்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. சிவசேனை முதலில் முதல்வர் பொறுப்பை பெறுமா அல்லது தேசியவாத காங்கிரஸ் முதலில் முதல்வர் பொறுப்பை பெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு கட்சியும் ஆலோசித்து வருகிறது.

முதல் அதிகாரம்
இதில் சிவசேனா எங்களுக்குத்தான் முதலில் அதிகாரம் வேண்டும். நீங்கள் இரண்டரை வருடம் கழித்து ஆட்சி செய்யுங்கள் என்று கூறி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ள உள்ளது. ஆனாலும் சிவசேனா இரண்டரை வருடத்திற்கு பின் ஏமாற்ற கூடாது.

கூட்டணி வேண்டும்
இரண்டரை வருடத்திற்கு பின் பாஜகவுடன் சேர கூடாது. ஐந்து வருடமும் ஆட்சியில் இருக்க வேண்டும். ஐந்து வருடமும் கூட்டணியில் தொடர வேண்டும். ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிவசேனாவிற்கு அறிவுறுத்தி உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications