வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய குழந்தை..மின்னல் வேகத்தில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டு
மும்பை: ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை விபத்தில் இருந்து கண நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் செயலை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெகுவாக பாராட்டினார்.
மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்
இதனால் மாநிலத்திலுள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில் மும்பையில் வாங்கனி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை ரயில்வே ஊழியர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது.

குழந்தை
அங்குள்ள 2-ஆம் எண் நடைமேடையில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். தாயின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த குழந்தை ரயில் தண்டவாளத்தில் திடீரென தவறி விழுந்தது. அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

ரயில்வே பிளாட்பார்ம்
இதனால் பதறிய அப்பெண் அந்த குழந்தையை தூக்க போராடிக் கொண்டிருந்தார். ரயில் பிளாட்பார்மில் இருந்து ஒருவர் ஓடி வந்துக் கொண்டிருந்தார். ஆனால் ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் மின்னல் வேகத்தில் தண்டவாளத்தில் ஓடி வந்தார்.

குழந்தை
தனது உயிரை துச்சமாக கருதி அந்த குழந்தையை தூக்கி நடைமேடையில் விட்ட ஊழியர், அவரும் மின்னல் வேகத்தில் நடைமேடையில் ஏறிவிட்டார். அவர் ஏறுவதற்கு ரயில் கடப்பதற்கும் கண்ணிமைக்கும் நொடிதான் இருந்தது. இந்த வீடியோ வைரலானது.
Salute to the courage of pointsman in Mumbai Division Mayur Shelkhe who saved life of a child who lost his balance while walking at platform.@ActorMadhavan @rajeev_mp @IshitaYadav @ipspankajnain @ipskabra @sonalkalra @sonalgoelias @RandeepHooda @DeepaAthlete @PiyushGoyal @jkd18 pic.twitter.com/ak1R4SDlbP
— IMShubham (@shubham_jain999) April 19, 2021
மயூர் ஷெல்கே
இதையடுத்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் , ஊழியர் மயூர் ஷெல்கேவை பாராட்டினார். பின்னர் ஊழியர்கள் அவருக்கு கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தனர். மின்னல் வேகத்தில் குழந்தையை காப்பாற்றிய மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications