ஒரே நாளில் ரூ.73470 கோடி இழப்பு! ஆட்டம் கண்ட முகேஷ் அம்பானி
மும்பை: ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஒரே நாளில் ரூ.73470 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.
உலகமே வியக்கும்படி முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் கடந்த வாரம் 12 ஆம் தேதி தடபுடலாக நடைபெற்றது. அதற்குப் பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள் வரை வந்து குவிந்தனர். தமிழ்நாட்டிலிருந்து ரஜினிகாந்த் உட்பட பலர் சென்று கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணத்திற்காக 5 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இது அம்பானியின் சொத்து மதிப்பில் 0.5%தான். அப்படிப் பார்த்தால், இந்தக் கல்யாணத்திற்கு அவர் ஏதோ கொஞ்சம் பணத்தைக் கிள்ளி போட்டுள்ளார் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதனால் வெறுப்படைந்து போன ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறினர். சமூக வலைத்தளங்களில் ஆனந்த அம்பானியின் திருமண செலவை ஈடுசெய்ய எங்களின் கட்டணத்தை உயர்த்துவதா? என்று பல விமர்சனங்கள் எழுந்தன.
அப்படி இருந்தாலும், ஒரே வாரத்தில் அவரது சொத்து மதிப்பு அதிகரித்ததாக சில நாட்கள் முன்னதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரே நாளில் ரூ.73470 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பீட்டின்படி இந்தியாவின் மதிப்புமிக்க ஒரு நிறுவனமாகும்.
ஃபோர்ப்ஸ் தகவல்படி, இவர் ரூ.976320 கோடி (ஜூலை 22 நிலவரப்படி) சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்று அடையாளம் காணப்படுகிறார். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிறுவன எண்ணெய், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி இந்நிறுவனத்தின், சந்தை மதிப்பீடு ரூ.73,470.59 கோடி சரிந்து, ரூ.20,30,488.32 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டு வரையிலான நிகர லாபத்தில் 5 சதவீதம் சரிவு ஏற்பட்டதை அடுத்து ரிலையன்ஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. ஆகவே இந்தளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. ப்ளூ-சிப் ஸ்டாக் 3.49 சதவீதம் சரிந்து பிஎஸ்இயில் ரூ.3,001.10 ஆகக் காணப்பட்டது. பகல் நேரப்படி, இது 3.56 சதவீதம் குறைந்து ரூ.2,998.80 ஆக இருந்தது. என்எஸ்இயில், இது 3.41 சதவீதம் குறைந்து ரூ.3,004 ஆக இருந்தது. வர்த்தக அளவுகோல் அடிப்படையில், நிறுவனத்தின் 1.90 லட்சம் பங்குகள் பிஎஸ்இயிலும், 98.37 லட்சம் பங்குகள் என்எஸ்இயிலும் வர்த்தகம் செய்யப்பட்டன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கடும் விற்பனை அழுத்தமானது பெஞ்ச்மார்க் குறியீடுகளைக் கீழே இழுத்துச் சென்றது. ஆகவே தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறுவனத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து. 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 102.57 புள்ளிகள் அல்லது 0.13 சதவீதம் சரிந்து 80,502.08 இல் நிலைத்து நின்றது. என்எஸ்இ நிஃப்டி 21.65 புள்ளிகள் அல்லது 0.09 சதவீதம் சரிந்து 24,509.25 ஆக இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெள்ளியன்று அதன் ஜூன் காலாண்டின் நிகர லாபத்தில் 5 சதவீதம் சரிவை அறிவித்தது. இந்தக் குழுமத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.15,138 கோடி அல்லது ஒரு பங்கின் விலை ரூ.22.37 ஆக உள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ.16,011 கோடியுடன் ஒப்பிடும்போது, அதாவது ஒரு பங்கின் விலை ஒரு நிறுவனத்தின் அறிக்கையின்படி ஒரு ஆண்டுக்கு முன்பாக ரூ.23.66 ஆக இருந்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications