அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறிய டிரைவர்.. ஆட்டோவுக்குள்ளேயே கதறிய இளம்பெண்.. என்னாச்சு?
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டிரைவர் கைதானார்
மும்பை: நம்பி ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் அந்த டிரைவர்.. நர்ஸ் சத்தம் போட்டதால், அந்த டிரைவர் அங்கிருந்து எகிறி தப்பி ஓடியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கிறார் அந்த பெண்.. 24 வயதாகிறது.. நர்ஸ் ஒருவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸ் ஆக வேலை பார்த்து வருகிறார்.
பெரும்பாலும் இவருக்கு ஆஸ்பத்திரியில் நைட் டியூட்டி பணியே வழங்கப்படும் என்று தெரிகிறது.. இப்படித்தான் சம்பவத்தன்றும் நைட் டியூட்டியில் இருந்துள்ளார்.
ஓட்டு முக்கியம் பிகிலு! பயணிகளிடம் 10 நிமிடம் பெர்மிஷன் கேட்டு.. ஓடிச் சென்று ஓட்டுப்போட்ட டிரைவர்
நைட் டியூட்டி
அவர் தினமும் நைட் டியூட்டி முடித்து விட்டு ரயிலில்தான் போக வேண்டும்.. ஆனால், அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் தொலைவில் இருப்பதால், இதற்காகவே தனியாக ஒரு பஸ் பிடித்து ஸ்டேஷன் வந்து இறங்க வேண்டும்.. வீட்டில் இருந்து திரும்பி வரும்போதும் இப்படியேதான் பஸ் ஏறி, அதன்பிறகு ரயிலை பிடித்து வந்து சேர்வார்.
டியூட்டி நேரம்
கடந்த பிப்ரவரி 17 அன்று, நர்ஸ் இரவு நேரத்தில் வீட்டுக்கு போவதற்கு பஸ்ஸுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது... அதை ஓட்டி வந்தவர் டிரைவர் தினேஷ் சவுரசியா என்பவராவார்.. முதலில் ஆட்டோவில் ஏறவில்லை என்று இளம்பெண் மறுத்துவிட்டார்.. பிறகு குறைவான பணம் தந்தால் போதும், வீட்டிலேயே கொண்டு போய் விட்டுவிடுவதாகவும் அந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் சொல்லி உள்ளதாக தெரிகிறது..
ஆட்டோ டிரைவர்
எனவே, நர்ஸ் அந்த ஆட்டோவில் ஏறி கொண்டார். வீட்டுக்கு செல்ல நர்ஸ் ஒரு வழி சொன்னால், தினேஷ் ரூட்டை மாற்றி ஓட்டினார்.. கடைசிவரை ஆட்டோவை அந்த நர்ஸ் சொன்ன வழியில் கூட்டி செல்லாமல் தினேஷ் வேறு ஒரு பகுதிக்கு ஆட்டோவை ஓட்டி வந்து நிறுத்தினார்.. ஆனால் அந்த பகுதியில் யாருமே இல்லை.. அந்த இடம், ஒரு மறைவான இடம் என்று கூறப்படுகிறது..
நர்ஸ்
அந்த இடத்தில் தன்னுடைய அந்தரங்க உறுப்பை காட்டி, நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் தினேஷ்.. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்ஸ் சத்தம் போட்டு கத்தியதும், அந்த ஆட்டோ ட்ரைவர், பெண்ணை அங்கேயே விட்டுட்டு ஓடி விட்டார்... பிறகு தட்டுத்தடுமாறி இடம் தேடி கண்டுபிடித்து, நர்ஸ் அங்குள்ள போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்து, அந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் சவுரசியாவை கைது செய்தனர் .