பாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்
சாக்லேட் தருவதாக கூறி 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மைனர் சிறுமி என்றும் பார்க்காமல் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து காட்டி அசிங்கம் செய்துள்ளான்.
மும்பை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீஸ் சிறுமிகளை கூட விட்டு வைக்காமல் சீரழிக்கின்றனர். மும்பையில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்திய காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாக்லேட் தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துப்போய் அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
சிறுமி என்றும் பாராமல் அசிங்கமாக நடந்து கொண்ட அந்த போலீஸ்காரரின் பெயர் சஞ்சய் வாக்மோட் என்பதாகும். 32 வயதாகும் அவர் கடந்த 14 ஆம் தேதியன்று கடைக்கு சாக்லேட் வாங்க வந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. வீட்டில் சாக்லேட் வாங்க கடைக்குப் போன சிறுமியை மறித்து சாக்லேட் தருவதாக கூறி தனது இருப்பிடத்திற்கு அழைத்துச்சென்றார்.

பேண்ட் ஜிப்பை திறந்து தனது உறுப்பின் மீது சாக்லேட்டை வைத்து அதை எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு ஓடி வந்து விட்டாராம். ஆனால் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லையாம். கடந்த 18ஆம் தேதியன்று மீண்டும் கடைக்குப் போன சிறுமியை சஞ்சய் மறித்துள்ளார். வீட்டுக்கு வந்தால் சாக்லேட் தருவதாக கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த சிறுமி வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்.
பயந்து போன சிறுமி வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார். அதைப்பார்த்த அந்த சிறுமியில் 8 வயது அண்ணன் கேட்டதற்கு, அழுது கொண்டே நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். இரண்டு முறை தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக கூறி அழவே, அதை வேலைக்கு போய் வீட்டுக்கு திரும்பிய தனது தாயிடம் அந்த சிறுவன் கூறியுள்ளான்.
ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தாயார், வடலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் சிறுமி சிறுவர் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தார். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது, அவரை கட்டி வைத்து பொதுமக்களே உதைத்தனர். போராட்டம் நடத்தியதன் பேரில் அந்த சப் இன்ஸ்பெக்டரை கைது செய்து சஸ்பெண்ட் செய்தனர். இப்போது மும்பையில் 4 வயது சிறுமியிடம் காவலர் ஒருவர் அசிங்கமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications