மட்டன் வாங்க கறிக்கடைக்கு போன நபர்.. இப்படியும் நடக்குமா?..மண்டை காய்ந்த ஓனர்..கடைசியில பார்த்தால்?
மும்பை: ஆட்டுக்கறி வாங்க ஆசை ஆசையாக வந்தார் மகேந்திர ராம்.. ஆனால், அந்த கறிக்கடையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், சாய் நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் மகேந்திர ராம்... நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆட்டுக்கறி வாங்குவதற்காக சென்றிருக்கிறார்.

வழக்கமாக இவர் கறி வாங்கும் மட்டன் ஸ்டால், அதே பகுதியில்தான் உள்ளது.. நேற்று மதிய நேரம் இவர் கறிக்கடைக்கு சென்றபோது, கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால், அவர்கள் எல்லாம் வாங்கி செல்லும்வரை அங்கேயே வரிசையில் காத்திருந்தார்.
மகேந்திர பாபு: அப்போது, மகேந்திர ராமுக்கு, தெரிந்தவர் ஒருவரும் கறிவாங்க கடைக்கு வந்திருந்தார்.. அவர் பெயர் மகேந்திர பாபு.. தனக்கு அறிமுகமானவர் என்பதால், அவருடன் மகேந்திர ராம் பேசிக்கொண்டிருந்தார்.. திடீரென முன்விவகாரம் தொடர்பான பேச்சுக்களை எடுத்தனர்.. அப்போது 2 பேருக்குமே தகராறு வந்துவிட்டது.. ஆளாளுக்கு தடித்த வார்த்தைகளை பேசி, ஆவேசமாகிவிட்டார்கள். இந்த ஆவேசம் கறி வாங்கும்வரை நீடித்தபடியே இருந்தது.
அதனால், யார் முதலில் கறி வாங்குவது என்பதில் போட்டி ஏற்பட்டது. 2 பேருமே தங்களுக்குதான் முதலில் கறியை தர வேண்டும் என்று கடைக்காரரிடம் சண்டை போட்டார்கள். 2 பேருமே, தங்களது ரெகுலர் கஸ்டமர் என்பதால், எப்படி சமாதானம் செய்வது என்பது தெரியாமல் மட்டன் கடைக்காரர் குழம்பிவிட்டார்.
கஸ்டமர்கள்: வாடிக்கையாளர் இடையிலான இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக, அதே மட்டன் கடையில் வேலைபார்க்கும் ஷேக் ரெஹ்மான் என்ற 22 வயது இளைஞர் முயற்சி செய்தார்.. 2 பேருமே தங்களுக்குதான் முதலில் கறியை வெட்டி தர வேண்டும் என்று அடம்பிடித்தார்கள்.. இறுதியில், ஷேக் ரெஹ்மான் ஒரு முடிவுக்கு வந்தார்.
அதன்படி, கடைக்கு முதலில் கறி வாங்க வந்தவர் மகேந்திர ராம் என்பதால், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மகேந்திர ராமுவுக்கு கறியை வழங்கி அனுப்பி வைத்தார். இதை பார்த்ததும், மகேந்திர பாபு கடுப்பாகிவிட்டார்.. ஏற்கனவே கோபமாக இருந்தவர், ஷேக் ரெஹ்மான் மீது ஆவேசம் அடைந்து தாக்க தொடங்கினார்..
ஒருகட்டத்தில், கறிவெட்டும் கத்தியை எடுத்துவந்து, ஷேக் ரெஹ்மானை, மகேந்திரபாபு சரமாரி தாக்கினார்.. இதனால் காயமடைந்த ஷேக் ரெஹ்மானும், கறிக்கடையில், கறி வெட்டும் இன்னொரு கூர்மையான பொருளை கொண்டு வந்து, மகேந்திர பாபுவை தாக்கினார். இதில், தலை, மார்பு, கை கால்களில் பயங்கரமான வெட்டுக்காயத்துடன் மகேந்திர பாபு மயங்கி விழுந்தார்...
ஈகோ: இதை பார்த்ததும் பதறிப்போன ஷேக் ரெஹ்மான், அவசர அவசரமாக கொண்டுபோய் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் மகேந்திர பாபு ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இதனையடுத்து, ஷேக் ரெஹ்மானை போலீசார் கைது செய்தனர்.. இந்த மோதலில் ஈடுபட்ட இன்னொரு கஸ்டமரையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். கறி வாங்க வந்தஇடத்தில் வெடித்த ஈகோ பிரச்சனையானது, கொலை வரை சென்றுவிட்டது நாக்பூரையே நடுங்க செய்துள்ளது.












Click it and Unblock the Notifications