மாலேகான் குண்டுவெடிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி
மும்பை: மாலேகான் குண்டுவேடிப்பு வழக்கில் தாம் நீதிமன்றத்தில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரிய பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாக்கூரின் மனுவ மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மகாராஷ்டிராவின் மாலேகானில் 2008-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த படுபயங்கரவாத செயலை இந்துத்துவா தீவிரவாதிகள் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சாத்வி பிரக்யாசிங் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியா ஏ.என்.ஐ.-ன் மும்பை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதனிடையே இவ்வழக்கில் ஜாமீனில் வெளியான பிரக்யாசிங், போபால் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் நீதிமன்றத்தில் வாரம் ஒருமுறை பிரக்யாசிங் ஆஜராக கடந்த ஜூன் 3-ந் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானார் பிரக்யாசிங்.
அப்போது, மாலேகானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது தெரியுமா? என நீதிபதி கேட்க, அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதே தெரியாது என பதிலளித்தார் பிரக்யாசிங். மேலும் தாம் எம்.பி. என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் மனுவைத் தாக்கல் செய்திருந்தார் பிரக்யாசிங்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி இன்று பிரக்யாசிங்கின் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் இன்று ஒருநாள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு தருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications