மாலேகான் குண்டுவெடிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி
மும்பை: மாலேகான் குண்டுவேடிப்பு வழக்கில் தாம் நீதிமன்றத்தில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரிய பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாக்கூரின் மனுவ மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மகாராஷ்டிராவின் மாலேகானில் 2008-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த படுபயங்கரவாத செயலை இந்துத்துவா தீவிரவாதிகள் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சாத்வி பிரக்யாசிங் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியா ஏ.என்.ஐ.-ன் மும்பை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதனிடையே இவ்வழக்கில் ஜாமீனில் வெளியான பிரக்யாசிங், போபால் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் நீதிமன்றத்தில் வாரம் ஒருமுறை பிரக்யாசிங் ஆஜராக கடந்த ஜூன் 3-ந் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானார் பிரக்யாசிங்.
அப்போது, மாலேகானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது தெரியுமா? என நீதிபதி கேட்க, அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதே தெரியாது என பதிலளித்தார் பிரக்யாசிங். மேலும் தாம் எம்.பி. என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் மனுவைத் தாக்கல் செய்திருந்தார் பிரக்யாசிங்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி இன்று பிரக்யாசிங்கின் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் இன்று ஒருநாள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு தருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications