கண் பகுதி மிக வேகமாக வருகிறது.. நிசார்கா புயலால் மும்பைக்கு காத்திருக்கும் ஆபத்து.. என்ன நடக்கும்?
மும்பை: நிசார்கா புயலில் கண் பகுதி இன்று மதியம் மும்பைக்கு அருகே வரும் என்பதால் அங்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Recommended Video
கொரோனா பாதிப்பிற்கு இடையே இந்தியாவை தாக்கிய ஆம்பன் புயலை தொடர்ந்து அடுத்த புயல் இந்தியாவை தாக்க உள்ளது. அரபிக் கடலில் உருவாகி உள்ள நிசார்கா புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை தாக்க உள்ளது .
நிசர்கா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 110 கிமீ வேகத்தில் மும்பை அருகே புயல் கரையை கடக்கும் என்கிறார்கள்.

மும்பை அருகே
மும்பைக்கு அருகே இன்று மதியம் புயல் கண் பகுதி இருக்கும்.இதனால் அங்கு அதிக வேகமாக காற்று வீசும். அப்போது 110 கிமீ/ நேரம் வேகம் வரை காற்று வீசும்.இந்த புயலின் கண் பகுதி மிகவும் வலிமையாக இருக்கிறது. பொதுவாக இந்த கண் பகுதிதான் புயலில் அதிகமான சேதத்தை ஏற்படுத்தும். இந்த கண் பகுதி எந்த அளவிற்கு சிறியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வேகமான காற்று வீசும்.

அளவு குறைவு
தற்போது இந்த புயலின் கண் பகுதியின் அளவு வேகமாக குறைந்துள்ளது. இது முதலில் 70 கிமீ சுற்றளவு இருந்தது. தற்போது வெறும் 65 கிமீ சுற்றளவு என்ற அளவிற்கு மாறியுள்ளது. இதனால் தற்போது இந்த புயல் புதிய வேகம் எடுத்து வலிமை அடைந்து இருக்கிறது. இதனால் புயல் மொத்த வேகம் 85 கிமீ/ நேரம் என்பதில் இருந்து 110 கிமீ/ நேரம் என்ற அளவிற்கு மாறியுள்ளது.

கண் பகுதி தாக்கும்
பொதுவாக ஒரு புயலில் கண் பகுதி எந்த இடத்தை தாக்குகிறதோ அங்குதான் சேதம் அதிகமாக இருக்கும். பெரிய அளவில் மரங்கள் விழும். இந்த பகுதியை பொறுத்தே புயலின் வேகம் நிர்ணயிக்கப்படும். தற்போது நிசார்கா புயலின் கண் பகுதி மும்பைக்கு அருகே வருகிறது. பொதுவாக இதுபோல கண் பகுதி பெரிய நகரங்களை நேரடியாக தாக்காது, மும்பை இப்படி ஒரு தாக்குதலுக்கு இன்று தயார் ஆகிறது.

நிசார்கா புயல் எப்படி
இந்த நிலையில் நிசார்கா புயல் காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பெரிய அளவில் சேதங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 11 மணிக்கு பிறகு மும்பையில் இந்த புயல் காரணமாக சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அங்கு 11 மணிக்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்யும். இந்த புயல் காரணமாக மகாராஷ்டிராவின் கடலோர பகுதிகள் எல்லாம் மிக மோசமாக பாதிக்கப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications