தாலியும் இல்ல.. பொட்டும் இல்லை! அப்பறம் எப்படி கணவனுக்கு பிடிக்கும்! நீதிபதியின் கருத்தால் சர்ச்சை!
மும்பை: புனே நீதிமன்றத்தில் நடந்த ஒரு குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில், நீதிபதி கூறிய சில கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. தாலி, பொட்டு வைக்கவில்லை என்றால் உங்களை எப்படி கணவரை பிடிக்கும் என நீதிபதி கேட்டதாக புனேயைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் லிங்க்டின் தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனே நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில் சமரசக் கூட்டம் நடந்துள்ளது அப்போது, அந்த நீதிபதி, வழக்கில் விசாரணைக்காக ஆஜரான பெண்ணிடம், "நீங்கள் மாங்கல்யம் மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கவில்லை போடவில்லை. திருமணமான பெண்ணைப் போல நடக்கவில்லை என்றால், உங்கள் கணவர் உங்களை விரும்புவாரா?" என்று கேள்வி எழுப்பினாராம்.

இந்த விவகாரத்தை புனேயைச் சேர்ந்த வழக்கறிஞர் அங்கூர் ஜஹகிர்தார் தனது லிங்க்டின் பதிவின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளார். இந்தக் கேள்வி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் விவாதம் முளைத்துள்ளது.
பழமையான எண்ணங்களைத் திணிக்கும் விதமாக நீதிபதி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அங்கூர் ஜஹகிர்தார் மற்றொரு சம்பவத்தையும் நினைவு படுத்தியுள்ளார். அதில், ஒரு நீதிபதி, "பெண்கள் தங்களை விட அதிகம் சம்பாதிக்கும் கணவர்களை விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் எந்த நிலையிலிருந்தாலும் திருமணம் செய்ய தயார்" என்றார் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கூர் தனது பதிவில் இந்த கருத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நீதிமன்றங்களில் இன்னும் பழமையான கருத்துக்களும் பாலின பாகுபாடும் இருக்கிறதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளதாகவும், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிபதிகள் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இப்படி பழமைவாத கருத்துக்களை வெளிப்படுத்துவது சரியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நீதிமன்றங்களில் கூட இப்படி கருத்துக்கள் வருவது சமூகத்தில் உள்ளே இருக்கும் பாலின பாகுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என பலரும் குற்றம் சாட்டுகின்றனர். நீதிபதிகள் கூறும் கருத்துக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் அல்லது புகார் அளிக்க முடியாத நிலை இருப்பதால் அத்தகைய கருத்துக்கள் அடிக்கடி நீதிமன்றங்களில் இருந்து வெளிவருவது பெரும் பிரச்சினையாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பாலின சமத்துவம் பழமை வாத கருத்துக்கள் இன்னும் நீதிமன்றங்களை இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகவும், சட்ட அமைப்புகள் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications