உத்தவ் தாக்கரே கான்வாய் மீது சாணம், தேங்காய் வீச்சு! பதிலடியாக நடந்த சம்பவத்தால் மும்பையில் பதற்றம்!
மும்பை: சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரேவின் கான்வாய் மீது ராஜ் தாக்கரேவின் மகா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தேங்காய் மற்றும் மாட்டு சாணத்தால் தாக்கியுள்ளனர். ராஜ் தாக்கரேவின் கார் மீது பாக்கு கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராகப் பதவி வகித்தவர். தற்போது சிவசேனா இரண்டாகப் பிளவுற்ற நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா UBT அணி செயல்பட்டு வருகிறது. பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ராஜ் தாக்கரே, சிவசேனாவில் இருந்து வெளியேறி கடந்த 2006ல் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா என்ற கட்சியை தொடங்கினார். இந்தக் கட்சி தற்போது மகாராஷ்டிராவில் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ளது.

ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே இரு தரப்புக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று ராஜ் தாக்கரேவின் வாகனம் பீட் நகரில் சென்று கொண்டிருந்தபோது, சிவசேனாவைச் (UBT) சேர்ந்த சிலர் வெற்றிலை பாக்கை வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கான்வாய் மீது, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மாட்டுச் சாணம் வீசியும், தேங்காயை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். ராஜ் தாக்கரேவின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்ததாக எம்என்எஸ் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தவ் தாக்கரே, தானேவில் உள்ள கட்காரி ரங்காயத்தன் என்ற இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த எம்.என்.எஸ் தொண்டர்கள், பைகளில் வைத்திருந்த மாட்டுச் சாணத்தை உத்தவ் தாக்கரே கான்வாயின் மீது வீசினர். மேலும், சிலர் தேங்காய்களையும், வளையல்களையும் கான்வாய் மீது வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Uddhav Thackeray convoy attacked with cow dung, tomatoes and bangles by MNS workers as "revenge" of Raj Thackeray's convoy hackle. ☠️ pic.twitter.com/lywRvCt022
— The Hawk Eye (@thehawkeyex) August 10, 2024
உத்தவ் தாக்கரே கான்வாய் மீது சாணம், தேங்காய்களை வீசி தாக்குதல் நடத்திய 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தவ் தாக்கரே மீதான இந்த தாக்குதல் மாநில அரசின் தோல்வி. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சரிந்துவிட்டது, உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் ஆனந்த் துபே கூறி உள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications