கடைசியாக ஒரு முறை.. இறுதி ஊர்வலத்தின் போது ரத்தன் டாடாவை பார்த்து வளர்ப்பு நாய் 'கோவா'செய்த செயல்
மும்பை: "கடைசியாக ஒரு முறை" உன் முகத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.. "போய் வா நண்பா" என்ற அர்த்ததுடன் ரத்தன் டாடாவை அவரது வளர்ப்பு நாய் கோவா பார்த்தபடி நின்றது. இறுதி ஊர்வலத்தின் போது ரத்தன் டாடா முகத்தை அப்படியே பார்த்தபடி வளர்ப்பு நாய் கோவா நின்ற உருக்கமான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டத. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது. இந்தநிலையில் நேற்று இரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.

குஜராத் மாநிலத்தில் பிறந்த பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்தார். கடந்த 2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளிலும், எளிமையாக வாழ்வதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு காரணமாக அனைவராலும் கவரப்பட்டவர் ரத்தன் டாடா. தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், தொழில்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர்" என்று கூறியிருந்தார். 1991ம் ஆண்டு ஏற்பட்ட தாராளமய கொள்ளைக்கு பிறகு இந்தியாவில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. அதில் ரத்தன் டாடாவின் பங்கு மிகவும் அளப்பறிது. ரத்தன் டாடாவை பற்றி பலரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
கிரிஷ் குபேர் என்பவர் 'The Tatas: How a Family Built a Business and a Nation' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், "ரத்தன் டாடாவிடம் 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ' என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் இருந்து. அந்தநாய்களை அவர் மிகவும் நேசித்தார். இதேபோல் பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும். தெரு நாய்கள் பெரும்பாலும் பம்பாய் ஹவுஸின் முகப்பு அறையில் (Lobby) அங்குமிங்கும் உலாவும். அந்த அளவிற்குநாய்கள் மீது அதிகபாசம் வைத்திருந்தார்" என்று கூறியிருந்தார்.
Ratan Tata’s love for dogs was legendary. His pet (Goa) meeting him for the last time 💔 #Ratan #RatanTata pic.twitter.com/paX54zihwu
— Prashant Nair (@_prashantnair) October 10, 2024
அவர் கூறியபடியேதான் இன்றையநாள் இருந்தது. ரத்தன் டாடா உடல் மும்பையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டிருந்தது. பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தின் போது, அவரை பிரிய மனம் இல்லாமல், அவரது உடலின் பக்கத்திலேயே உட்கார்ந்து அவரது முகத்தை அப்படியே பார்த்தபடி நின்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது..
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications