நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாட்கள் காவல்.. ஜாமீனும் நிராகரிப்பு.. நீதிமன்றம் அதிரடி
மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் சந்தேகம் தெரிவித்து பீகார் போலீசில் அளித்த புகார் அளித்தார். இதையடுத்து சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது ரியாவின் வாட்ஸ் அப் பதிவுகள் படி, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுஷாந்தும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.முன்னதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வந்தது. இதனால் தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

போதைப்பொருள் பயன்பாடு
.போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

போதை கும்பலுடன் தொடர்பு
அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவிடம் அண்மையில் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் நடிகை ரியா, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்றும் கூறினார்.

போதை தடுப்பு பிரிவு
இந்தநிலையில் 2வது நாளாக நேற்றும் நடிகை ரியா பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினார் அவரிடம் சுமார் .8 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகை ரியாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின்னர் ஆதாரங்கள் அடிப்படையில், நடிகை ரியா சக்ரபோர்த்தியை மும்பையில் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கைது செய்தனர்.

ஜாமீனும் நிராகரிப்பு
அதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ரியா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.அத்துடன் ரியா சக்ரபோர்த்தியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்பு ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் காவலுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இன்று இரவு அவர்களது லாக்கப்பில் இருக்க போகும் ரியா. நாளை பைக்குல்லா சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications