"தப்பு பண்ணிட்டேன்.." சல்மான் கானுக்கு வந்த மிரட்டல்.. இரண்டே நாளில் மொத்தமாக மாறிய சீன்.. என்னாச்சு
மும்பை: சல்மான் கானை தொடர்ந்து குறிவைத்து லாரன்ஸ் பிஷ்னோய் கேங் கொலை மிரட்டல் கொடுத்து வருகிறது. இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே உள்ள பகையைத் தான் முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அதற்கு சல்மான் கான் ரூ.5 கோடி தர வேண்டும் என்றும் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கிடையே அதே நபர் இப்போது தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக மற்றொரு மெசேஜ் அனுப்பி உள்ளது பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு படுகொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது என்சிபி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் என்பவர் மும்பையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

அதுவும் அவர் தனது மகனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குச் சென்றிருந்த நிலையில், அங்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிஷ்னோய் கேங்: பாபா சித்திக் மரணத்திற்கு பிஷ்னோய் கேங் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் உடன் நெருங்கிய நட்பில் இருந்ததற்காகவே பாபா சித்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த 1990களின் இறுதியில் ராஜஸ்தானில் கலைமான் ஒன்றை சல்மான் கான் வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. கலைமான்களை பிஷ்னோய் சமூகத்தினர் கடவுளாகக் கருதுவார்கள். இதுவே இரு தரப்புக்கும் உள்ள பகைக்கு முக்கிய காரணமாகும்.
தனது சகோதரர்களில் ஒருவரை (கலைமான்) கொன்ற சல்மான் கானை நிச்சயம் பழிவாங்குவோம் என்று பிஷ்னோய் கேங் எச்சரித்தது. மேலும், சல்மான் கானுக்கு யார் உதவினாலும் அவர்களும் பதில் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்தது. இந்தச் சூழலில் தான் கடந்த அக். 18ம் தேதி மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்தது.
முதலில் வந்த மிரட்டல்: அதில் லாரன்ஸ் பிஷ்னாய் கேங் உடன் இருக்கும் பகையை முடிவுக்குக் கொண்டு வர சல்மான் கான் ரூ 5 கோடி தர வேண்டும் என்றும் அப்படித் தரவில்லை என்றால் பாபா சித்திக்கிற்கு ஏற்பட்ட நிலையே சல்மான் கானுக்கும் ஏற்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
அதில் மேலும், "இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சல்மான் உயிருடன் இருக்க வேண்டும்... லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் ₹ 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால் பாபா சித்திக் நிலையை விட சல்மானின் நிலை மோசமாகிவிடும்" என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
அடுத்து வந்த மன்னிப்பு: இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கானில் வீடு, மும்பை பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மீண்டும் அதே நம்பரில் இருந்து போலீசாருக்கு மற்றொரு மெசேஜ் வந்துள்ளது. அதாவது சல்மான் கானை மிரட்டியதற்கு மன்னிப்பு கேட்டு அந்த மெசேஜ் வந்துள்ளது. மேலும், கொலை மிரட்டல் கொடுத்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
பின்னணி: அதாவது முதலாவது மெசேஜ் வந்த உடனேயே மகாராஷ்டிரா போலீசார் அந்த நம்பரை டிராக் செய்யத் தொடங்கியுள்ளனர். அது ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்ததைக் கண்டறிந்த அவர்கள், யார் அந்த மெசேஜை அனுப்பினார் என்பதையும் கண்டுபிடித்துவிட்டனர். மேலும், அவரை பிடிக்க மும்பையிலிருந்து ஒரு போலீஸ் குழு ஜார்கண்ட் சென்றுள்ளது. இந்த நேரத்தில் தான் மன்னிப்பு மெசேஜ் வந்துள்ளது. அதேநேரம் அவர் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவரா.. அவர் எதற்காக சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்த தகவல்களை போலீசார் பகிரவில்லை.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications