மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு ஆதரவா? சோனியாவை சந்தித்த சரத் பவார்.. என்ன பேசினார்கள்?

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம், எதிர்கட்சியாகவே தொடரலாம் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம், எதிர்கட்சியாகவே தொடரலாம் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

ஆனாலும் பாஜக - சிவசேனா இடையே இன்னும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. சிவசேனா கண்டிப்பாக முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது.

ஆர்சிஇபியில் இந்தியா ஏன் இணையவில்லை? மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்? இதுதான் நடந்தது!ஆர்சிஇபியில் இந்தியா ஏன் இணையவில்லை? மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்? இதுதான் நடந்தது!

சந்திப்பு

சந்திப்பு

இந்த நிலையில்தான் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடந்து இருக்கிறது. அவரின் சந்திப்பில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது.

பாஜக சிவசேனா

பாஜக சிவசேனா

இதில் சிவசேனா பாஜக இடையில் சரியான உறவு இல்லை. அவர்கள் தற்போது கூட்டணி வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதனால் சிவசேனா உடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிப்பது குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்து இருக்கிறார்கள்.

முடியாது

முடியாது

ஆனால் சிவசேனா உடன் ஐந்து வருடம் எல்லாம் கூட்டணி வைக்க முடியாது. அது மிகவும் கஷ்டம். அதேபோல் சிவசேனா உடன் கூட்டணி வைத்தால் மதசார்பற்ற தன்மை போய்விடும். சிவசேனா உடன் சேர்வது சரியாக இருக்காது என்றும் தேசியவாத தலைவர் சரத் பவார் ஆலோசித்து இருக்கிறார்.

வேண்டவே வேண்டாம்

வேண்டவே வேண்டாம்

இதையடுத்து மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாகவே தொடரலாம் என்று தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளது. சிவசேனாவிற்கு ஆதரவு தர வேண்டாம். அவர்கள் ஆட்சியை அமைக்கட்டும். இல்லையென்றால் தேர்தலை சந்திப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

English summary
Sharad Pawar decides that the NCP Will remain an Opponent party in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X