மகாராஷ்டிராவில் சிவ சேனா அவர்கள் வழியை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.. சரத் பவார் அதிரடி பேட்டி
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை சட்டசபை தேர்தலின்போது இணைந்து போட்டியிட்டன, இப்போது அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
முதல்வர் பதவி உள்ளிட்ட அதிகாரங்கள் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இடையே, நடைபெற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க, சிவசேனா தொடர்ச்சியாக, முயற்சி செய்தபடியே உள்ளது.

காங்கிரஸ்
ஆனால் இதற்கு, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள, காங்கிரஸ் கட்சி, முட்டுக்கட்டை போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை, மாலை 4 மணியளவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையியல், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது,.

சரத்பவார் பேட்டி
காங்கிரஸ் தரப்பிலிருந்து உறுதியான ஒரு பதில் வராத நிலையில் தான் இவ்வாறு இழுபறி நிலை நீடித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய சரத்பவார், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின்போது சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. அவர்கள் அவர்களுக்கான அரசியலை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் தங்கள் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தெரிவித்தார்.

சரத் பவார் ஆலோசனை
இதனிடையே, இன்று மாலை காங்கிரஸ் கட்சியின், இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து, சரத்பவார் ஆலோசனை நடத்த உள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடக்க வாய்ப்பு உள்ளது.

குடியரசு தலைவர் ஆட்சி
மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் அங்கு சட்டசபை கலைக்கப்படவில்லை, என்பதால் இன்னும் 6 மாத காலத்திற்குள் அங்கு யார் வேண்டுமானாலும் ஆட்சியமைக்க உரிமை கோரும் வாய்ப்பு திறந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications