இங்கேயும் வாரிசு அரசியல்?மகாராஷ்டிரா துணை முதல்வராகும் ஷிண்டே மகனுக்கு சிவசேனாவில் கடும் எதிர்ப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு விட்டுக் கொடுத்துள்ளார் இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இந்த நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வராக மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவை பாஜக மேலிடத்துக்கு பரிந்துரைத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இதனை பாஜக மேலிடமும் ஏற்றுக் கொண்டதால் தற்போது லோக்சபா எம்பியாக இருக்கும் ஶ்ரீகாந்த் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதல்வராகிறார் என்கின்றன சிவசேனா வட்டாரங்கள். ஆனால் ஶ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க சிவசேனா மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 230 இடங்களைக் கைப்பற்றியது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி. இதனைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைப்பதில் மகாயுதி கூட்டணி தீவிரமாக உள்ளது. ஆனால் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் தீவிரமாக இருந்தார். இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ஏக்நாத் ஷிண்டேவை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார் ஏக்நாத் ஷிண்டே. இந்த முடிவை அறிவித்த பின்னர் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவது உறுதியாகி இருக்கிறது. சிவசேனா சார்பில் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் துணை முதல்வராகிறார்.
ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே தற்போது லோக்சபா எம்பியாக இருக்கிறார். மகாராஷ்டிராவின் கல்யாண் லோக்சபா தொகுதியில் 2014, 2019-ல் போட்டியிட்டு வென்றதுடன் ஹாட்ரிக் வெற்றியாக 2024-லும் அபார வெற்றியைப் பெற்றார். நாடாளுமன்றத்தில் இளம் மராத்தா எம்பி என்ற பெருமைக்குரியவர். 1987-ம் ஆண்டு பிறந்தவர் ஶ்ரீகாந்த் ஷிண்டே.
இதனிடையே உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யாவை முன்னிறுத்தி வாரிசு அரசியல் செய்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, தன் மகனை முன்னிறுத்துவதா? என்கிற சலசலப்பு சிவசேனாவில் எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் இந்த நடவடிக்கைக்கு சிவசேனா மூத்த தலைவர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications