வெட்கங்கெட்ட அரசியல்.. இறக்கை ஒட்ட நறுக்கப்பட்ட அஜித் பவார்.. சாம்னாவில் சேனா கிழி..கிழி
மும்பை: மும்பையில் பாஜக வெட்கங்கெட்ட அரசியலில் ஈடுபட்டுவிட்டதாகவும் அஜித் பவாரின் இறகுகள் ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டதாக சாம்னாவில் சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
மகாராஷ்டிரா வெள்ளிக்கிழமை வரை காங்கிரஸ்- என்சிபி ஆதரவுடன் சனிக்கிழமை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பது குறித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால் ஒரு நாள் இரவில் என்ன செய்ய முடியும் என கேட்போருக்கு மகாராஷ்டிரா அரசியல்தான் உதாரணம்.
ஒரு நாள் இரவில் அத்தனையையும் புரட்டி போட்டது போல் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உதவியுள்ளார்.

சாம்னா
அஜித் பவார் எடுத்த முடிவு என்சிபியின் முடிவல்ல என்பதை சரத்பவார் தெளிவுப்படுத்திவிட்டார். அஜித்பவாரின் இந்த முடிவால் சிவசேனா கடும் கொந்தளிப்பில் உள்ளது. அதிலும் பாஜக மீது கோபத்தை கொப்பளிக்கும் நிலையில் உள்ளது. இதன் வெளிப்பாடாக சாம்னாவில் பாஜகவை கிழி கிழி என கிழித்துவிட்டது.

12 மணி நேரம்
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறிப்பிடுகையில் இது வெட்கங்கெட்ட அரசியல். சரத்பவார் பழிவாங்கப்பட்டுள்ளார். 12 மணி நேரத்தில் அஜித்பவார் தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டி கொண்டார்.

இறகுகள்
அவர் சட்டசபையின் என்சிபி எம்எல்ஏக்களின் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரது இறகுகள் ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டன. நேற்றைய தினம் மும்பையில் நடந்தவை எல்லாம் கேலிக்கூத்தாகும் என தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
இதனிடையே பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன.

பெரும்பான்மை
அதில் அவசர அவசரமாக காலை பொழுதிலேயே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேவேந்திர பட்னவீஸுக்கு முதல்வராக மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என வழக்கில் குறிப்பிட்டுள்ளன. அது போல் குதிரை பேரத்தை தடுக்க உடனே பெரும்பான்மையை நிரூபிக்க வழி வகுக்குமாறும் கோரியுள்ளனர்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications