மகாராஷ்டிராவில் அடுத்த 25 வருஷத்துக்கு எங்க ஆட்சி தான்.. பாஜகவை வம்பிழுத்த சிவசேனா
Recommended Video
மும்பை: சிவசேனா தலைமையில் காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைய உள்ளது. இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் அடுத்த 25 வருஷத்துக்கு எங்கள் ஆட்சி தான் நடக்கும் என்று கூறி சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் , பாஜகவை சீண்டியுள்ளார்.
சிவசேனா கட்சியை பால் தாக்கரே கடந்த 1966ம் ஆண்டு ஆரம்பித்தார். அந்த கட்சி பின்னாளில் இந்துத்துவா சித்தாந்தத்தை கையில் எடுத்த நிலையில் பாஜகவும் அதே சித்தாந்தம் உடைய கட்சி என்பதால் இரு கட்சிகளும் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருந்தன.
இந்த கூட்டணி யாருக்கு முதல்வர் என்ற போட்டியில் உடைந்து போனது. இதனால் கூட்டணியை விட்டு வெளியேறிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. நாளை காங்கிரஸ், சிவசேனா, என்சிபி ஆகிய மூன்று கட்சி தலைவர்களும் இணைந்து ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோர உள்ளனர்.

மக்கள் நலன்
இந்நிலையில் சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் என்.சி.பி உடன் ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இது மாநில மற்றும் மக்களின் நலனுக்காக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
அமைய உள்ள அரசு இது ஒரு கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி, கூட்டணியாக இருந்தாலும் சரி, ஆட்சிக்கான நிகழ்ச்சி நிரல் அவசியம். உள்கட்டமைப்பு திட்டங்கள் (பருவமழை பிரச்சனை, வறட்சி, பொதுவான பிரச்சனை) முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும். எங்களுடன் வருபவர்கள் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள். அவர்களின் அனுபவத்திலிருந்து நாங்கள் பயனடைவோம் என்றார்.

25 வருடத்திற்கும்
சுழற்சி முறையில் முதல்வர் பதவி மாற்றி அமைக்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், 'மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார். யார் என்ன முயற்சி செய்தாலும் மகாராஷ்டிராவில் சிறப்பான தலைமையை சிவசேனா வழங்கும்.

உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா மக்களுக்கும் எங்களுக்குமான உறவு நிரந்தரமானது. கடந்த 50 ஆண்டுகளாக எங்களது கட்சி உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதிகாரப்பகிர்வு குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. உத்தவ் தாக்கரே அந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார்" என்று ராவத் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications