மகாராஷ்டிரா: இரு பிரிவினரிடையே வன்முறை-அவுரங்கசீப், திப்புசுல்தான் குறித்த சமூக வலைதள பதிவால் மோதல்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப், திப்புசுல்தான் குறித்த சமூக வலைதளப் பதிவுகளால் மிகப் பெரும் மோதல் வெடித்துள்ளது. மகாராஷ்டிராவில் கோலாப்பூரில் தடையை மீறி சென்ற இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் அவுரங்கசீப், திப்புசுல்தானை புகழ்ந்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு மதத்தைச் சேர்ந்த குழுவினர் பதிவிட்டிருந்தனர். அதில் அவுரங்கசீப், திப்புசுல்தானை புகழக் கூடிய வாசகங்களுடனான போஸ்டர்களும் பகிரப்பட்டிருந்தது. அதிலேயே மராத்தா சமூகத் தலைவர்கள், அரசர்களை இகழக் கூடிய வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

அவுரங்கசீப், திப்புசுல்தான் உள்ளிட்டோரை புகழ்ந்தும் மராத்தா தலைவர்களை இழிவுபடுத்தியும் ஒருதரப்பினர் திடீரென செயல்படுவதைக் கண்டித்து இந்துத்துவா அமைப்பினர் இன்று கோலாப்பூரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் கோலாப்பூர் சிவாஜி பூங்கா அருகே ஆயிரக்கணக்கானோர் திடீரென ஒன்று திரண்டு வாட்ஸ் அப் குழுவினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் கூட்டத்தின் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனையடுத்து போலீசாருக்கும் இந்துத்துவா அமைப்பினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.
மேலும் கோலாப்பூர் நகரில் பல இடங்களில் தனியார் சொத்துகள் குறிவைத்து தாக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. இதனால் கோலாப்பூரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாந்த் ஷிண்டே கூறுகையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். யார் தவறு செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், அவுரங்கசீப்பை ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் புகழ்வதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்? சகிக்க முடியாது. மகாராஷ்டிராவில் ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் அவுரங்கசீப்பை புகழ்கின்றன சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவை திடீரென நிகழவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோலாப்பூரில் பல இடங்களில் போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications