பரபரப்பை ஏற்படுத்திய சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் நாளை தீர்ப்பு!
மும்பை: சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
குஜராத்தை சேர்ந்த சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீ ஆகியோர் 2005ஆம் ஆண்டும், கூட்டாளி துளசிராம் பிரஜாபதி 2006ஆம் ஆண்டும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இவை போலி என்கவுண்டர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, குஜராத் சிஐடி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை 2010ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது. 210 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
இரு வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற இறுதி வாதத்தில், பிறழ் சாட்சியங்களையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. நடைபெற்றது போலியான என்கவுண்டர் தான் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளை இந்த தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி, இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற போது குஜராத் உள்துறை அமைச்சராக பதவி வகித்த அமித்ஷா, இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications