மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போதையில் தெருநாயை கூட்டாக பலாத்காரம் செய்த ‘குடி மகன்கள்’.. மும்பையில் பயங்கரம்

தெருநாயை நான்கு பேர் போதையில் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போதையில் நாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த குடிமகன்கள்

    மும்பை: மும்பையில் போதையில் இருந்த நான்கு ஆண்கள் சேர்ந்து தெருநாய் ஒன்றை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையின் மால்வானி சர்ச் அருகே வசித்து வருபவர் சுதா பெர்னாண்டஸ். தினசரி அப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிப்பது அவரது வாடிக்கை. அப்படியாக கடந்த வாரம் சனிக்கிழமை தெருநாய் ஒன்றிற்கு உணவு அளிக்கச் சென்றுள்ளார் சுதா.

    steet dog brutally gang raped

    ஆனால், அந்த நாய் மிகுந்த சோர்வுடன் உடலில் காயங்களுடன் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரும் அங்கு விரைந்து வந்தார். எப்போதும் அவர்களைக் கண்டால் பாசத்துடன் ஓடி வரும் அந்த நாய், அன்று இவர்களைக் கண்டு அஞ்சியுள்ளது. அதோடு நகர முடியாமல் அவதிப்பட்டுள்ளது.

    இதனால் குழப்பமடைந்த சுதா, நாயை நன்றாக பார்த்தபோது அதன் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு அதில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விலங்குகள் நலனுக்காக பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து நாயை கொண்டுபோய் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே காயமடைந்த நாயை சம்பவத்தன்று நான்கு இளைஞர்கள் போதையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதைப் பார்த்ததாக சுதாவிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அதிகாலையில் 2 மணியளவில் போதையில் இருந்த நான்கு பேர், நாயின் கால்கள் மற்றும் வாயைக் கட்டிப் போட்டுவிட்டு அதனை பலாத்காரம் செய்ததாகவும், நாயின் ஓலத்தைக் கேட்டு தான் அந்த இடத்திற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் பார்த்ததும் போதை ஆசாமிகள் அங்கிருந்து ஓடி விட்டதாகவும் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மால்வானி போலீசார் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 11வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் கூறிய குற்றவாளிகள் நான்கு பேரையும் தேடி வருகிறார்கள்.

    போதையில் தெரு நாயை பாலியல் ரீதியாக சிலர் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A street dog was brutally gang-raped by four men in Mumbai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X