கீழே விழுந்த சிறுவன்.. கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. உஷாரா இருங்க

Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிரா: தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன.

தானே மாவட்டம் அம்பர்நாத் மேற்கு சங்கர் ஹைட்ஸ் எனும் குடியிருப்புப் பகுத்து உள்ளது. இங்கு வசிக்கும் 4 வயது சிறுவன் சுமேத் லோகர், நேற்று நண்பர்களுடன் குடியிருப்பு வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தான்.

stray dogs bites 4 yrs old kid in thane

அப்போது அங்கு சுற்றிக் கொண்டிருந்த 3 தெருநாய்கள் சிறுவன் சுமேத் லோகரை விரட்டின. இதனால் பயந்து போன சிறுவன் அங்கிருந்து ஓடிய போது கால் தவறி கீழே விழ, விரட்டி வந்த தெருநாய்கள் அந்த சிறுவனை கடித்து குதறின. இந்த வீடியோ சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

வலி தாங்க முடியாமல் அலறிய சிறுவனின் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நாய்களை விரட்டி அடித்து சிறுவனை மீட்டனர். அவனுக்கு முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து, சிறுவனை பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு ஓடினர். அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்குமாறு அம்பர்நாத் நகராட்சிக்கு கவுன்சிலர் உமேஷ் பாட்டீல் உள்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தானே மட்டுமல்லாது, நமது தமிழகத்திலும் சென்னை உட்பட பல பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமல்ல, பகல் நேரத்திலேயே ரவுண்டு கட்டி மக்களை அச்சுறுத்துகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+