டாடா குழுமத்திற்குள் வீசும் நிர்வாக புயல்.. பின்னணி விவரம் இதோ!
டெல்லி: இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், அதன் நிர்வாகத்தில் சமீப காலமாக கடும் சலசலப்பைச் சந்தித்து வருகிறது, முடிவெடுப்பதில் எப்போதும் ஒருமித்த கருத்தைப் பின்பற்றும் இந்தக் குழுமம், தற்போது எதிர்பாராத உள் முடக்கத்தில் சிக்கியுள்ளது.
இந்தப் பிரச்னையின் மையம் டாடா அறக்கட்டளைகளே ஆகும், இது டாடா சன்ஸ்-ன் 66% பங்குகளைக் கட்டுப்படுத்துகிறது, இங்குள்ள ஏழு முக்கிய அறங்காவலர்களுக்கு இடையே வாரிய நியமனங்கள், தகவல் பெறுதல், மற்றும் டாடா சன்ஸ்-ஐ பொதுப் பட்டியலில் (listing) இணைப்பது தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து 3-4 என்ற அளவில் பிளவு ஏற்பட்டுள்ளதால், முடிவெடுப்பதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா தலைமையிலான நிலைத்தன்மை பிரிவு, மாற்றங்கள் படிப்படியாக இருக்க வேண்டும் என்றும், மறுபுறம் டாரியஸ் காம்பட்டா போன்றோர் அடங்கிய சீர்திருத்தவாதிகள், வாரியத்தில் புதிய மற்றும் பல்வேறுபட்ட தொழில் பின்னணிகளைக் கொண்ட நியமன இயக்குநர்கள் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், ரிசர்வ் வங்கி (RBI), டாடா சன்ஸ்-ஐ ஒரு "உயர் அடுக்கு NBFC" எனக் வகைப்படுத்தியுள்ளதால், அது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொதுப் பட்டியலில் இடம்பெற வேண்டிய கட்டாயம் உள்ளது, ஆனால் டாடா சன்ஸ், இந்தத் தேவையைத் தவிர்க்க, NBFC பட்டியலில் இருந்து தன்னை நீக்குமாறு விண்ணப்பித்துள்ளது, அதே சமயம் டாடா சன்ஸ்-ல் 18.37% பங்குகளை வைத்துள்ள ஷாப்பூர்ஜி பலோன்ஜி (SP) குழுமம், பட்டியலிடலை ஆதரிக்கிறது.
இந்த நிர்வாக முடக்கம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானதாகக் கருதப்படுவதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமைதியைக் கொண்டு வர டாடா குழுமத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்,
இது முன்பு நடைபெறாத அரசு தலையீடு ஆகும். டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தொழில்முறைத் தலைவராக இருப்பதால், இந்தக் கருத்து வேறுபாட்டில் நடுநிலை வகித்து, குழுமத்தின் அன்றாடப் பணிகள் பாதிக்காமல் இருக்கச் சமநிலையை நிலைநாட்ட முயற்சிக்கிறார், இந்த நிர்வாக நெருக்கடி, டாடா குழுமத்தின் அடுத்த பத்தாண்டு நிர்வாக மாதிரியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
BW Businessworld ஊடகத்தில் இது தொடர்பாக Rahuail Amin எழுதியுள்ள கட்டுரையில் இது தொடர்பான தகவல்கள் இடம் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications