Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தில்ல பார்த்தீங்களா? உபி பள்ளிகளில் மராத்தி கற்று கொடுக்கனுமாம் யோகிக்கே லெட்டர் போட்ட பாஜக பிரமுகர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: உத்தரப் பிரதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மராத்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு மகாராஷ்டிரா பாஜக மாநில துணைத் தலைவர் கிருபாசங்கர் சிங் கடிதம் எழுதி இருக்கிறார்.

தமிழ்நாடு தவிர்த்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை மூலம் விருப்பப் பாடமாக பெரும்பாலும் இந்தி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு நிலைநாட்டியதால் நமது மாநில பாடத்திட்டத்தில் இன்னும் இந்தி சேர்க்கப்படவில்லை.

வலதுசாரிகள் கருத்து

வலதுசாரிகள் கருத்து

அதேநேரம் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் புதிய கல்விக் கொள்கையில் இதற்கு மாற்றாக மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு இந்தியை திணிக்கும் முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்தி கற்றால் வட மாநிலங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு பயனளிக்கும் என்று வலதுசாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

 தமிழர்கள் கருத்து

தமிழர்கள் கருத்து

ஆனால், ஏராளமான வடமாநிலத்தவர்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கே வேலைத் தேடி வருகின்றனர் என்பதால், அவர்கள் வேண்டுமானால் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்ளட்டும் என்ற வாதத்தை தமிழ், கன்னட அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

 பாஜக பிரமுகர் கடிதம்

பாஜக பிரமுகர் கடிதம்

பிராந்திய மொழி ஆர்வலர்கள் தொடர்ந்து கூறி வந்த இந்த கருத்து, தற்போது பாஜக தலைவரிடமே ஒலித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவராக இருப்பவர் கிருபாசங்கர் சிங். இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், உத்தரபிரதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மராத்தி மொழியை விருப்பப் பாடமாக வைக்க கோரிக்கை விடுத்து உள்ளார்.

மராத்தியை உபி பள்ளிகளில் போதிக்க கோரிக்கை

மராத்தியை உபி பள்ளிகளில் போதிக்க கோரிக்கை

மராத்தியை மாணவர்கள் கற்றுக்கொண்டால் மகாராஷ்டிராவில் நல்ல வேலை கிடைக்கும் என்று கடிதத்தில் கூறியுள்ள கிருபாஷங்கர், உத்தரப் பிரதேசத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் பலரும் மகாராஷ்டிராவிற்கு வேலை தேடி வருவதாகவும், அவர்கள் மராத்தி மொழி புரியாமல் பல சிக்கல்களை சந்தித்து வருவதை தாம் 50 ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+