மோசமான உடல் நிலை.. சமூக செயற்பாட்டாளர் வரவர ராவ், சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றம்
மும்பை: மகாராஷ்டிராவில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து சிறையில் இருந்து மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பேஷ்வாக்களுக்கு எதிராக தலித்துகள் பெற்ற வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டம் 2018 ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா-கோரேகானில் நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி 81 வயதாகும் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான வரவர ராவ் உள்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பையின் தலோஜா சிறையில் உள்ள வரவர ராவ் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டுமென்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் உடல்நலம் மோசமடைந்து வருவதால், வரவர ராவ்க்கு மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து மும்பையில் உள்ள சர் ஜே.ஜே. மருத்துவமனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சர் ஜே.ஜே. மருத்துவமனை டீன் டாக்டர் ரஞ்சீத் மங்கேஷ்வர் இந்த தகவலை உறுதி செய்தார்.
தெலங்கானாவை சேர்ந்த பெண்டியாலா வரவர ராவ் இடதுசாரி கருத்துகளையும் கொண்ட எழுத்தாளர், கவிஞர் ஆவார். .தெலுங்கானாவில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் குறித்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் ஆவார். இவர் தான் 2002ம் ஆண்டு மாவோஸ்ட்டுகளுக்கும் ஆந்திர அரசுக்கும் இடையே சண்டை நிறுத்தத்திற்கு மத்தியஸ்தராக இருந்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications