மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயம்.. சென்னையை சேர்ந்த இளைஞர் படைத்த சாதனை
மும்பை: சமீபத்தில் மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயத்தில் சாய் பிருத்வி என்ற சென்னையை சேர்ந்த 23 வயது இளைஞர் சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
சர்வதேச விளையாட்டு போட்டிகள் , தேசிய விளையாட்டு போட்டிகளில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பலர் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றனர். செஸ், கால்பந்து, ஹாக்கி, தடகளம் என்று பல போட்டிகளில் தமிழர்கள் சாதனைகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயத்தில் தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அதன்படி இணையம் மற்றும் மாதிரி காரின் மூலம் இந்த இந்த மின்மாதிரி கார் பந்தய போட்டி நடத்தப்படும்.
நிஜமான கார் ரேஸ் போல.. ஆனால் மின்மாதிரி முறையில் இந்த கார் பந்தயம் நடத்தப்படும். இதற்காக முறையாக பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். அதேபோல் முறையாக பயிற்சி எடுத்து அனுபவம் கொண்ட திறமைசாலிகள் மட்டுமே இதில் வெற்றிபெற முடியும்.
அந்த சோதனையின் அடிப்படையில் மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதன் அடிப்படையில் மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயத்தில் சாய் பிருத்வி என்ற சென்னையை சேர்ந்த 23 வயது இளைஞர் சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
சாய் பிருத்வி இப்படி மின் மாதிரி கார் பந்தயங்கள் மட்டுமின்றி இதற்கு பல நேரடி கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர். அந்த அனுபவமும் சேர்ந்து இவர் மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நேரடி கார் பந்தயங்களில் எல்லோரும் பங்கேற்க முடியாது. பாதுகாப்பு தொடங்கி பல விஷயங்கள் உள்ளன.. அப்படி பங்கேற்க முடியாதவர்கள் அந்த அனுபவத்தை எளிதில் பெறும் வகையில், அதே சமயம் தங்களின் திறமையை வெளிக்காட்டும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இஸ்போட்ஸ் நிறுவனம் சார்பாக இந்த போட்டிகள் அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications