திருடப்போன வீட்டில் பணம், நகை இல்லை.. தூங்கி கொண்டிருந்த பெண்.. சபலப்பட்ட திருடனுக்கு தரமான சம்பவம்
மும்பை: திருடர்கள் பலர் பல விதங்களில் சுற்றுகிறார்கள். திருடப்போன வீட்டில் சிலர் கறி எடுத்து சமைத்திருந்தால், அதனை வயிறு முட்ட சாப்பிடுவார்கள். சிலர் திருட வந்த இடத்தில் மது மயக்கத்தில் குறட்டை விட்டு தூங்கிவிடுவார்கள். சிலர், திருட வந்த வீட்டில் திருட்டை மறந்து வேறு சில விஷயங்களையும் செய்வார்கள். அந்த வகையில் மும்பையில் கொள்ளையடிக்க வந்த வீட்டில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை திருடன் முத்தமிட்டார். அதனால் அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருட வந்த இடத்தில் திருட்டை தவிர வேறு வேலைகளை செய்தால் என்னாகும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக வடிவேலு ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார். திருடப்போன ஒரு வீட்டில் சாப்பிடுவார்.. அந்த சாப்பாட்டில் மருந்தை கலந்து வைத்திருப்பார்கள்.. திருடிவிட்டு சென்ற சிறிது நேரத்திலேயே வடிவேலுவுக்கு மயக்கம் வரும். அவர் கடைசியில் முரட்டு வைத்தியம் செய்து பிழைப்பார். இது சிரிப்புக்காக படத்தில் காட்டப்பட்டிருக்கும்..

ஆனால் உண்மையில் திருட வந்த வீட்டில் சிலர் மது அருந்திவிட்டு மயங்கி விழுந்துவிடுவார்கள். சிலர் திருட வந்த வீட்டில் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். சிலர் திருட வந்த வீட்டிலேயே தூங்கிவிடுவார்கள். ஆனால் மும்பையில் கொள்ளையடிக்க வந்த வீட்டில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை திருடன் முத்தமிட்டார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மும்பை மலாடு குரார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் திருடன் ஒருவர் பெண்ணின் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்தார். வீட்டில் பல இடங்களில் தேடியபோது பணம், நகை என எதுவுமே திருடனுக்கு சிக்கவில்லை. இதனால் வெறுங்கையுடன் திருடன் வெளியே செல்ல முயன்றான். அப்போது, வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கண்ட திருடனுக்கு மோகம் ஏற்பட்டது.
இதையடுத்து பெண்ணின் அருகே சென்ற திருடன் திடீரென அவரை முத்தமிட்டார். இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.உடனே திருடன் அங்கிருந்து தப்பி சென்றான். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் திருடனின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து, அவனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications